இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பட்டினத்துப் பிள்ளையார்
385
பொறித்துக் கல்லில்[1] எழுதினான்; பின்னர் அ.து “உய்யக்கொண்டான் திருமலை” என வழங்குவதாயிற்று. விசயநகர வேந்தரான மல்லிகார்ச்சுன மகாராயர் காலத்துக் கல்வெட்டொன்று,[2] “இராசகம்பீர வளநாட்டுத்தென்கரைப் பிரமதேயமான உய்யக் கொண்டான் திருமலை” என்று கூறுகிறது. முதல் இராசராசனுடைய பதினெட்டாம் ஆட்சியாண்டில் சோழநாடு பல வளநாடுகளாகப் பிரிக்கப்பெற்றபோது அரிசிலாற்றுக்கும் காவிரிக்கும் இடையில் உள்ள பகுதி[3] “உய்யக் கொண்டார் வளநாடு” எனப்பெயரிடப் பெற்றது.
இனி, அடிகளைப் பட்டினத்துச் சுவாமிகள் என்று வழங்கும் வழக்குப் பற்றி வணிகருட் சிலர், பட்டின சுவாமியென்ற பெயரை மேற்கொண்டு, “பாலையூருடையான் பட்டின சுவாமி” “காளையார் கோயிற் பெருந் தெருப் பட்டின சுவாமிகள்”[4] என அந்தக் காலத்தில் இருந்திருக்கின்றனர்.
- SIV—25