நந்திக் கலம்பகம்
401
விளங்குகிறது. பல்லவ வேந்தருள் இம் மூன்றாம் நந்திவன்மனுக்கு முன்னும் பின்னும் தோன்றியவருள் எவரும் இவனைப் போலத் தனி நூல்வடிவில் புலவர் பாடும் புகழ் பெற்றவர் இருந்ததாக இதுகாறும் தெரிந்திலர். இவன் காலத்தில்தான் பெருந்தேவனார் பாரதம் பாடியது மாகும்; அவர் இவ்வேந்தனைப் 'பல்லவர் கோமான் பண்டிதராலயனைப் பரவினேம்[1] ' என்று கூறுவது இதற்கு ஏற்ற சான்று.
இக் கலம்பகம் பாடிய புலவர், தெள்ளாறெறிந்த நந்திவன்மன், ' விடையுடன் மங்கல விசயமும் நடப்ப, ஒரு பெருந் தனிக்குடைநீழல், அரசுவீற்றிருக்க அருளுக என2[2] சிவபெருமானப் பரவுவதும், 'வாழி நந்தி தண்ணிழல் வெண்குடை ஊழிநிற்கவே[3] '’ என வாழ்த்துவதும், நோக்கின், இக்கலம்பகம் நந்திவன்மனைக் கொல்லும் குறிப் பொடு பாடப்பெற்ற தென்பது பொருத்தமாகத் தோன்றவில்லை. மேலும், இக் கலம்பகமுடையார், "பகையின்றிப் பார் காக்கும் பல்லவர்கோன்' என்பதும், பாடும் பாணாற்றுப்படையும் ' மண்ணெலா முய்ய மழைபோல் வழங்கு கரத், தண்ணுலாமாலைத் தமிழ் நந்தி ' என்றும், பைந்தமிழை ஆய்கின்ற கோன் நந்தி' என்றும் கூறுவதும் நந்திவன்மன்பால் பகைமை யுடையரல்ல ரென்றே காட்டுகின்றன.
நந்திவன்மன் தந்திவன்மனுக்கு நேரிய மகன் என்பதே செப்பேடுகளாலும் கல்வெட்டுக்களாலும் பெறப்படுவது; கலம்பகம் பற்றிய வரலாறுகள் கூறும் கூற்றுக்கு ஒருவகை ஆதரவும் இல்லை.
நந்திவன்மனுக்குத் தம்பியர் உண்டென்றும், அவர்கள் அவனுக்குமாறுபட்டு ஒழுகினரென்றும் இக்கதைகள் கூறுவதுபோலவே, இக் கலம்பகமுடையாரும், "குலவீரர் ஆக
S{V–26