பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருஞானசம்பந்தர்

57

அவை,

“கதிர்முடி மன்னனும் இவர்தங்
களிற்றுரிமை யாண்மையினை
அதிசயித்துப்புகழ்ந்துரைப்ப
அறிந்த அமைச்சர்களுரைப்பார்
மதியணிந்தார் திருத்தொண்டு
வாய்த்த வலியுடைமையினால்
எதிரிவருக் கிவ்வுலகிலில்லை
யென எடுத்துரைத்தார்”


“தம்பெருமான் றிருத் தொண்ட
ரெனக்கேட்டதார் வேந்தன்
உம்பர் பிரானடியாரை
யுணராதே கெட்டொழிந்தேன்
வெம்பு கொடும்போர் முனையில்
விட்டிருந்தேனென வெருவுற்று
எம்பெருமான் இது பொறுக்க
வேண்டுமெனஇறைஞ்சினான்”


“இறைஞ்சுதலு முன்னிறைஞ்சி
என்னுரிமைத் தொழிற்கடுத்த
திறம் புரிவேனதற் கென்னே
தீங்கென்ன ஆங்கவர்க்கு
நிறைந்த கிதிக் குவைகளுட
னீடு விருத்திகளளித்தே
அறம் புரியுஞ் செங்கோலான்
அஞ்சலிச்செய்துரைக்கின்றான்”


“உம்முடைய நிலைமையினை யறியாமை கொண்டுய்த்தீர்
எம்முடைய மனக் கருத்துக் கினிதாக விசைந்து மது
மெய்ம்மைபுரிசெயல்விளங்க வேண்டியவாறேசரித்துச்
செம்மைநெறித்திருத்தொண்டு செய்யுமென விடைகொடுத்தான்”


“மன்னவனே விடை கொண்டு தம்பதியின் வந்தடைந்து
பன்னு புகழ்ப் பரஞ்சோதியார் தாமும் பனிமதி வாழ்
சென்னியரைக் கணபதிச்சரத் திறைஞ்சித் திருத்தொண்டு
முன்னை நிலைமையில் வழுவா முறையன் பிற்செய்கின்றார்”

என்பன.