பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ཕན་བློ་ 197

மாமுனிவர் என்னும் பெரியாரிடம் ஞானோபதேசம்பெற்றவர்."இவரது நூலில் உள்ள முதல் மூன்று சூத்திரங்கள் பிரமாண - இயல் எனவும், அடுத்த மூன்றும் இலக்கண இயல் எனவும், அடுத்த மூன்று சூத்திரங்கள் சாதன இயல் எனவும், கடைசி மூன்றும் பயன் - இயல் என்றும் பெயர் பெறும். -

பிரமான இயல் பதி, பாசம், பசு என்னும் மூன்றும் உண்மை என்பதை மூன்று சூத்திரங்களால் விளக்கும்.இலக்கண இயல் பசு, பாசம், பதி என்னும் மூன்றன் இலக்கணங்களை முறையே மூன்று சூத்திரங்களால் விளக்கும். சாதன இயல் என்பது அடைதற்குரியவர் உயிர்கள் என்பதையும், இறைவன் திருமேனி கொண்டு ஞானம் உணர்த்தலையும், அங்ங்னம் ஞானம் கைவரப்பெற்ற உயிர் ஐந்தெழுத்தோதிப் பயன்பெறலையும் முறையே மூன்று சூத்திரங்களால் விளக்கும்.பயன் இயல் என்பது பாசநீக்கம், சிவப்பேறு, சிவப்பேற்றினை நிலைநிறுத்த நிகழ்வன இன்னவை என்பன முறையே மூன்று சூத்திரங்களில் விளக்கும். இவ்வுண்மைகள் யாவும் தருக்கமுறையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

பிரமான இயல்

முதற் சூத்திரத்தில் கடவுள் உண்மையும், அவர் எல்லாவற்றையும் ஒடுக்கி மீளத்தோற்றுவிக்கும் முதல் பெருமானாகிய சிவன் என்பதும் கூறப்பட்டுள்ளன. கடவுள் உயிர்களுடன் அத்துவிதமாக நின்று அவைகட்கு வினைப்பயனை ஊட்டும் முறையும்,உயிர்கட்டுமலபந்தத்தால் பிறப்பு:இறப்புநிகழும்முறையும் 2-ஆம் சூத்திரத்திற் கூறப்பட்டுள்ளன. மூன்றாம் சூத்திரம் உயிர் சூன்யத்தை அறிவது, பருவுடல், அறிகருவிகள், நுண்ணுடல், பிராணவாயு முதலியவற்றிற்கு வேறானது. தானே அறிவதின்றி உணர்த்தஉணர்வது,உடற்காரணங்கள்கூடியிருப்பினும் அவற்றிற்கு வேறாய் நின்று அறிவது என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.

籌 - -

இலக்கண இயல் .

- உட்கரணங்கள் ஆகும் சித்தம், மனம், அகங்காரம், புத்தி என்பவற்றுள் ஒன்று அன்றாய், வேறாய்நிற்பது உயிர். அது அநாதிகால முதலே ஆணவ மலத்திற்கட்டுண்டு கிடப்பது, புற ஆகக்கருவிகளும் உயிரும், அமைச்சும் அரசும் போல விளங்குவன. உயிர்கட்கு அக்கருவிகள் துணை செய்வன. இவையாவும் தொழிற்படுங்காலம் உயிர்கட்கு நன்வுநிலை என்ப்படும். இவற்றுட் சில குறைந்த காலம்