பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 1 (பதி) 111 'பொருள் எனப்படுவன யாவும் சத்தேயாகும். ஆகவே பதியின் உண்மை இயல்பாகச் சொல்லப்படும் சத்து’ என்பதற்கு நிலைபேறு அஃதாவது, என்றும் ஒருபடித்தாய் இருத்தல், என்றே பொருள் கொள்வார் பேரருட்செல்வராகிய மெய்கண்டார். அவர் கருத்துப்படி சத்து என்பதை மெய்” என்றுதான் கூறவேண்டும். மெய்ம்மையாவது, என்றும் மாற்ற மேயின்றி ஒரு படித்தாய் நிலைத்து நிற்கும் தன்மையாகும். திருவள்ளுவப் பெருந்தகையும் முதற்பொருளை மெய்ப் பொருள்" என்றும், அதனை உணர்தலை மெய்யுணர் தல்" என்றும் கூறுவதை நினைவுகூரலாம். செம்பொருள்' என்று அவர் குறிப்பிடுவதும் இப்பொருளில்தான் என்பதையும் சிந்தித்து அறியலாம். எனினும், உபநிடதங்களின் வழக்குபற்றி முதற் பொருளை உள்ளது எனவும் கூறுகின்றார். மெய்ப் பொருள், செம்பொருள் என அவ்வறிஞர் பெருமான் கூறு வதை நோக்கி உள்ளது என்பதற்கு மெய்கண்டார் கூறிய வாறு என்றும் ஒரு படித்தாய் உள்ளது என்பதே பொருளாகும் என்பது அவர்க்கும் கருத்தாகும் என்று தெளியலாம். ‘சத்து’ என்பது என்றும் ஒருபடித்தாய் உள்ளது' என்பதைத் தெளிந்தபின் மாறுதலடையும் பொருள்கள் 100. குறள் - 155 மெய்ப் பொருள் காண்பது அறிவு' 101. மேலது அதி. 16 அதாவது பிறப்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் விபரீத ஐயங்களாலன்றி உண்மையான் உணர்தல் (பரிமேலழகர் உரை) இதனை வடநூலார் “தத்துவ ஞானம்' என்பர். 102. மேலது - 358. சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு. தோற்றக் கோடுகளின்மையின நித்தமாய், நோன்மை யான் தன்னையொன்றும் கலத்தலின்மையின் தூயதாய்த்தான் எல்லாவற்றையும் கலந்து நிற்கின்ற முதற்பொருள் விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாதல்பற்றி அதனைச் செம்பொருள் என்றார். (பரிமேலழகர் உரை)