பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} | 6 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் தகுதியைப் பெற்றிருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் அவர் தாம் விரும்பும் செயல்களை விரும்பியவாறே செய்தல் கூடும். இத்தன்மையை அப்பர் பெருமான், "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என்று அருளிச் செய்துள்ளார். சிவபெருமானின் அற்புதச் செயல்கள் பலவும் இத்தலைமைத் தன்மையை விளக்குவன வாகும். காமனை எரித்தது, நஞ்சை உண்டது. தாருகவனத்து முனிவர்களின் கொடுஞ்செயலால் தாக்குண்ணாது நின்றது போன்ற வரலாறுகள் பலவும் அவர் பிறர் வயப்படாமையை எடுத்துக்காட்டும். காலனைக் காய்ந்தது, நான்முகனின் சிரம் கொய்தது, சிவபெருமானை விடுத்து அமுதம் பெறச் சென்ற தேவர்கட்கு ஆலகாலவிடம் கிடைத்தது போன்ற வரலாறுகள் பலவும் அவரது இச்சைப்படியே யாவும் நிகழ்தலாகிய தன்வயம் உடைமையை எடுத்துக் காட்டுவனவாகும். காலனும் திசைக்காவலனும் தேவர் பலரும் தம் வயம் உடையராகா மையை இவ்வரலாறுகள் தெரிவிப்பன. இன்னும் காமனை எரித்த காலத்தில் திருமால் முதலிய பலரும் அங்ங்ணம் காக்க மாட்டாது ஒழிந்தமையையும் அவர்களது தன்வயம் இன்மை யைக் காட்டுவதாகும். இங்ங்ணம் எவ்விடத்தும் யாவர்க்கும். அடிமைப்படாது எங்கும் தானே யாவரையும் அடிம்ை கொண்டு தன் இச்சைப்படி எல்லாவற்றையும் நிகழ்த்துபவனே யாவர்க்கும் மேலான தனிப்பெருந் தலைவனாகின்றான். இதுபற்றியே சிவபெருமானை மகாதேவன் என்றும், பெரியோன் என்றும் தமிழ் நூல்கள் குறிக்கின்றன என்பதை உளங்கொள்ள வேண்டும். இதனால் பதிப்பொருளுக்கு முதலாவதாக இன்றியமையாது வேண்டப்படும் குணம் தன் வயமுடைமையாதல் என்பது தெளிவாகின்றதன்றோ? 11. அப். தேவா. 5.98:1