பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} | 8 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் ஆகும். அறிவு செயற்கையாக நிகழலாமல் இயற்கையாகவே விளங்கினும் அஃது ஒரு காலத்து ஒன்றையே அறியும் சிற்றறிவாய் விடின் பயனின்றாதலின், அனைத்தையும் எஞ் ஞான்றும் தன் இச்சை வழி நடத்த ஒருங்குணர்தலாகிய இஃது அடுத்து வேண்டப்படுவதாகின்றது. இம்முற்றுணர்வு இல்லாத காரணத்தாலேயே வேந்தர்கள் ஒற்றர்களையும் உரைசான்ற நூல்களையும் கண்ணாகக் குறள் 381) கொள்ள வேண்டியவர் களாகின்றனர். இறைவனோ அனைத்தையும் எக்காலத்திலும் தானாகவே உணர்கின்றான். இயல்பாகவே பாசங்களின்மை. இது வடமொழியில் நிராமயம் என்று வழங்கப்பெறும், ஆமயம்-நோய். அது பாசமாகும். நிராமயம் இயல்பாகவே பாசமின்மையாகின்றது. இயற்கையாக விளங்குவதும், எல்லாவற்றையும் ஒருங்குணர் வதுமான இறைவனது அறிவு, பாசத்திற்கு மறுதலையாய துண்ணியதன்மையை உடையதென்பதைக் குறிக்கும். இறைவ னது அறிவைப் பாசம் எவ்வாற்றானும் மறைக்கும் ஆற்றலைப் பெற்றிலது என்பது உணரப்பெறும். பேரருளுடைமை. இது வடமொழியில் அலுப்தசக்தி' ன வழங்கப்பெறும். குறைவில்லாத ஆற்றல் என்பது தன் சொற்பொருள். ஈண்டு ஆற்றல் என்பது அருளையே 1றிக்கும்; செயல் அடுத்து (ஏழாவதாக)க் கூறப்படுதலின் |ங்ங்னம் கொள்ளப்பெற்றது. அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின் நோய் தன்நோய்போல் போற்றாக் கடை" 'ன்றபடி பேரறிவுடைமையால், எல்லா உயிர்களிடத்தும் ஞ்ஞான்றும் குறையாத கைம்மாறற்ற பெருங் கருணை அவனிடம் உண்டு என்பது தெளியப்படும். “பால் நினைந் 12. குறள் - 315