பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் 2. (பசு) 125 அப்பெருமான் கூறுவது ஒவ்வொருவனும் தனது ஊர், தனது வீடு, என்று கூறுதல் போலவே தனது உடம்பையும் 'எனது உட்ம்பு' என்று தனக்கு வேறாகக் கூறுதல் உள்ளது. 'யான் உடம்பு’ என்று உடம்பையே தானாகக் கூறுதல் இல்லை. இதனால் ஒவ்வொருவனும் தனது உடம்பிற்கு வேறாகத் தான் இருப்பது புலனாதலால் தான் அல்லது யான் எனப்படும் உயிர் காணப்படுகின்ற பருஉடம்பின் வேறேயாகும் என்று தெளிவிப்பர். இதற்கும் ஒருதடையை நிகழ்த்துவர் தேகான்மவாதி கள்."எனது உடம்பு’ என்பதை எனது உயிர் எனது அறிவு' என்பனபோல ஒற்றுமைக் கிழமைப் பொருளாகக் கொள்ள வேண்டுமேயன்றி, "எனது ஊர்', 'எனது வீடு என்பனபோல் வேற்றுமைக் கிழமைப் பொருளாகக் கொள்ளலாகாது; மேலும், 'யான் பருத்தேன்; நீ இளைத்தாய்; அவன் கறுப்பன், இவன் சிவப்பன் என்றாற் போலக் கூறுவனவற்றில் யான், நீ, அவன் முதலியவை உடம்பைக் குறித்து நிற்றல் வெளிப்படை யன்றோ? என்பதே அத்தடை. அதற்கும் மெய்கண்டார் விடை கூறுவார்.அவர் கூறுவது எனது உயிர், எனது அறிவு' என்பன சிறுபான்மை அவ்வாறு வழங்குவதாகும். எனது கை, எனது கால், எனது தலை என்றாற் போல்வன, “எனது ஊர், எனது வீடு, எனது மாடு” என்றார் போலப் பெரும்பான்மை யாக வரும் வேற்றுமைக் கிழமைப் பொருள்களேயாகும். தனக்கு வேறாகவுள்ள பொருள்களையும் அவற்றின்மீதுள்ள பற்றுக் காரணமாகத் தானாக மதித்தல் உண்டு என்பதை, ஒருவன் தனது ஆடை அணிகலன் முதலியவற்றையும், மனைவி மக்கள் முதலியோரையும் அவ்வாறு மதித்து அப்பொருளை உயிராக நினைக்குமாற்றால் அறியலாம்; யான் பருத்தேன்', 'யான் இளைத்தேன்' என்றாற் போலக் கூறுவனவும் அங்ங்னம் மயங்கிக் கூறுவனவேயாகும்.