பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் 2 (பசு) 135 என்பதே பொருளாகும். அதாவது சித்துப்பொருளை நோக்க அசித்து என்னும்படியும், அசித்துப் பொருளை நோக்க 'சித்து என்னும்படியும் நின்று, சித்தோடு கூடிச் சித்தாயும் அசித்தோடு கூடி அசித்தாயும் நிற்பதாய ஒரு தன்மை என்பதே பொருளாகும் என்பது உணரப்படும். ஏனையவற்றிற் கும் இவ்வாறே பொருள் கொள்ளல் வேண்டும். உயிர் 'சதசத்து' என்பதற்குச் சத்தும் அன்றாய், அசத்தும்’ அன்றாய், சத்தை நோக்க அசத்தாயும், அசத்தை நோக்க சத்தாயும் நின்று சத்தோடு கூடிச் சத்தாயும் அசத்தோடு கூடி அசத்தாயும் நிற்பதொரு தன்மையாகும் என்பதும் தெளியப் படும். உயிர் குக்குமாகுக்குமப் பொருள் என்பதும் இவ்வாறேயாகும். இதனால் : உயிரை அருவப்பொருள் என்றோ, உருவப்பொருள் என்றோ இருதன்மைகளையுடைய பொருள் என்றோ கூறுதல் பொருந்தாது. இங்ங்னமே உயிரின் தன்மை எல்லாவற்றையும் தனியாக வைத்து உணர்தல் வேண்டும். ஆகவே, பதி, சத்து, சித்து, குக்குமம் எனவும். பாசம், அசத்து அசித்து துலம்’ எனவும், பசு பதியை நோக்க அசத்து, அசித்து, தூலம் எனவும், பாசத்தை நோக்க “சத்து, சித்து, சூக்குமம் எனவும் சொல்லத்தக்க தனித்தன்மை யுட்ையது என்பதாயிற்று. பசு சதசத்து, சிதசித்து, சூக்குமா சூக்குமம்' என்பதற்கும் இதுவே பொருளாதல் அறிந்து தெளியப்படும். - -- மேலும் மெய்கண்டார் தரும் விளக்கம்: சித்தாயும் சத்தாயும் நிற்கும் பதிக்கும், அசித்தாயும் அசத்தாயும் நிற்கும் பாசத்திற்கும் சிறந்த தொடர்பு உண்டாவதில்லை. இதனால் இவற்றுள் ஒன்றால் மற்றொன்றிற்கு வருவது ஒன்றும் இல்லை. இடையில் நிற்கும் பசுவே இரண்டனோடும் சிறந்த வகையில் தொடர்புடையதாய் உள்ளது. இதனால் இஃது இரண்டாலும்