பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் வரும் நன்மை தீமைகளை எய்துகின்றது. இதனை மெய்கண்டார், இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா” என்னும் ஓர் அரிய தொடரால் விளக்குவர். இத்தொடர் மூன்று வேற்றுமைத் தொடர்களாய் நின்று மூன்று வேறுபட்ட பொருள்களைத் தருவதையும் காண்போம்: (1) இருதிறன் அறிவுளது என்று இரண்டாம் வேற்றுமைத் தொகையாக நின்று இருதிறன்களாகிய சத்து, அசத்து என்ற இரண்டினை யும் அறியும் அறிவினையுடையது என்னும் பொருளையும், (2) இதே தொடர் மூன்றாம் வேற்றுமைத் தொகையாக நின்று இருதிறன்களாகிய சத்து அசத்துகளின் உதவியால் அறியும் அறிவினையுடையது என்னும் பொருளையும்; (3) இத்தொடர் ஏழாம் வேற்றுமைத் தொகையாக நின்று இருதிறன்களாகிய சத்து அசத்து ஆகிய இரண்டன் கண்ணும் நின்று அறியும் அறிவையுடையது என்னும் பொருளையும் தருவதை அறிந்து தெளியலாம். - விளக்கத்தை மேலும் தெளிவாக்கல் பாசம் அறிவில் லாத பொருள் என்பதையும், பசு அறிவுடைய பொருள் என்பதையும் நாம் அறிவோம். பதிக்குப் பசு தன் இனமும் (ஸ்வஜாதி) பாசம் வேற்று இனமும் (விஜாதி) ஆகின்றன. பதிக்குப் பசு தன் இனம் என்பதை ஒப்புக் கொண்டு, பதியின் சாயை (நிழல்) அல்லது கூறே (அம்சம்) பசு என்பவரது கூற்றை ஒப்புக் கொண்டால் நேரிடும் அசம்பாவிதம் என்ன என்பதை விளக்க வேண்டியதாகின்றது. இனம் என்பதும், ‘சாயை அல்லது கூறு' என்பதும் ஒன்றாகாது. ஏன்? 'தேமா, புளிமா என்னும் இருமரங்களும் மரம் என்னும் ஓர் இனத்தைச் சேர்ந்தவை என்பதனால் ஒன்றன் சாயை அல்லது 9. சி.ஞா.போ. சூத். 7