பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் பின்னுணர்த்து மன்றிப் பிரளயா கலர்க்கு முன்னுணர்ந்துந் தான்குருவாய் முன்." என்ற வெண்பாவில் இம்மூவகை உயிர்களையும் குறிப்பிட் டுள்ளார். இவர்களுள் சகலர் என்பதற்கு கலையோடு கூடியவர் என்பது பொருள். அகலர் என்பதற்கு கலை இல்லாதவர் என்பது பொருள். கலை என்பது மாயையின் கூற்றைக் குறிக்கும்.” மாயை மயக்கும் தன்மையுடையது. ஆதலின் ‘சகலர் என்பது மயக்கத்தையுடையவர் என்னும் பொருளி லும் அகலர்' என்பது மயக்கம் இல்லாதவர் என்னும் பொருளிலுமே வழங்கப் பெறுகின்றன. - மாயை இருவகைக் கூறுபாடுகளையுடையது. ஒன்று: முக்குண வடிவாய் நின்று மயக்கத்தைச் செய்வது மற்றொன்று அவ்வாறின்றி அறிவினை மயக்குதல் மாத்திரமே செய்வது. இவற்றில் முக்குண வடிவமாய் மாயை அகலர்' என்பவர் கட்கு இல்லை. கன்மமும் அங்ங்னமே மயங்குவதும், மயங் காததும் என இருவகைப்படும். அவற்றுள் மயக்கும் கன்மம் விஞ்ஞான கலருக்கு இல்லை. விஞ்ஞான கலர் என்பதற்கு விஞ்ஞானத்தால் கலை நீங்கப் பெற்றவர் என்றும், பிரளயாக லர் என்பதற்கு பிரளயத்தில் கலை நீங்கப் பெற்றவர் என்றும் பொருள் கூறப் பெறுகின்றது. சொற்பொருள் அப்படி என்றாலும் செயற்கையாலன்றி, இயற்கையாகவும் விஞ்ஞான கலர் பிரளயாகலர் என்னும் நிலையினராய் இருத்தல் உண்டு. இங்ங்ணம் வேறு வேறு விதமாகச் சொல்லப்பெறும் உயிர்கள் அனைத்திற்கும் எவ்வகையான பந்தத்தையும் விடுத்து வீடு பெறுதலே முடிந்த பயனாகும் என்பது அறிந்து தெளியப்படும். 55. சி.ஞா.போ.சூத், 8, அதிகாரம் 2 மேற்படி வெண்:47 56. காலம், ಕ್ಲಿಲ್ಲಿ கலை என்ற மூன்று தத்துவங்களும் மாயையிலிருந்து தோன்றும். r