பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் 3 (பாசம்) 207 அவ்வினைக்கேற்ப பரு உடம்பை இறைவன் அவற்றிற்குக் கூட்டுவிப்பான். பிறப்புகள் தொடர்ந்து நிகழும். பருவுடம்பு நுண்ணுடம்பு முதலியவற்றின் இயல்புகள் பின்னர் விளக்கப் பெறும். முதற்கண் நுண்ணுடம்பு வரும்பொழுது ஒவ்வோர் ஆன்மாவும் தன்தன் தகுதிக்கு ஏற்ப ஒவ்வொன்றையும் இச்சிக்கும்- விரும்பும்- என்று முன்பு கூறப்பெற்றது. இத்தகுதி பற்றி ஈண்டுச் சில சொற்கள் உயிர்கள் துல அறிவை உடையன என்பது அனைத்திற்கும் ப்ொதுத்தன்மையாகும். ஆயினும், ஆத்தூல அறிவும் உயிர்தோறும் வேறுவேறாகவே அமைந்துள்ளது. இந்த வேறுபாடே அவற்றின் சிறப்பியல்பு ஆகும். இச்சிறப்பியல்பிற்கேற்ப ஆணவ மலப்பிணிப்பும் உயிர்தோறும் வேறு வேறாகவே அமைந்துள்ளது. எல்லா உயிர்களும் ஒருகாலத்தில் வீடுபேறு அடையாமல் வேறு வேறு காலத்தில் அதனை அடைவதற்கும், விஞ்ஞானகலர், பிரளயாகலர் சகலர் என்னும் பிரிவுகட்கும் ஆணவ மலப் பிணிப்பின் வேறுபாடேயாகும். விஞ்ஞானகலர்முதலிய ஒவ் வொன்றிலும் உள்ள உயிர்களிலும் உயிர்தோறும் ஆணவ மலப் பிணிப்பு வேறுவேறு வகையாகவே உள்ளது. இந்தப் "பிணிப்பு வேறுபாடு’தான் தகுதி அல்லது பக்குவம் என்பது அறியப்படும். நுண்ணுடம்பு கிடைத்தவுடன் உயிர்கள் இத் தகுதிக்கேற்பவே அறிவு விளக்கம் பெறும். இவ்விளக்கத்திற் கீடாகவே இச்சையும் முயற்சியும் நிகழும். இதனால் உயிர்தோறும் வினைகள் வேறு வேறாகவே அமையும். இவ்வினைக்கேற்பவே அவையும் வேறு வேறு பிறப்பினையும் அடையும் என்பது உணரப்பெறும் ஆக, கன்மத்தின் (வினையின்) இயல்பு ஒருவாறு விளக்கப் பெற்றது.