பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் . 3 (பாசம்) 27 மலங்களைந் தாற்சுழல் வன்றயி ரிற்பொரு மத்து றவே' என்று ஐந்து மலங்களையும் காட்டிச் செல்வதையும் காணலாம். திருமூலரும், சிவமாகி ஐவகைத் திண்மலம் செற்றோர் அவமாகார் சித்தர்.முத் தாந்தத்து வாழ்வார்." என்று மொழிவதையும் காணலாம். மேற்காட்டிய சித்தியாரில் (2.86) முளை தவிடு, உமி என்ற உவமைகள், முறையே கன்மம், மாயை, ஆணவம் என்பவற்றிற்கு உரியனவாகும். இங்ங்னமே போகம், பந்தம், போத்திருத்துவம் என்றவற்றையும் அவ்வாறே நிரல்நிரையாக கன்மம் போகத்தையும், மாயை பந்தத்தையும் ஆணவம் போத்திருவத்தையும் பண்ணும் என்றே கொள்ள வேண்டும் என்பதையும் கண்டு தெளியலாம். மேலும் விளக்கம்: முளை என்றது முளைத்தல் சக்தியைக் குறிப்பது. கன்மம் என்பது முளைத்தல் சக்திபோல் நின்று போகத்தைப் பண்ணுதலாவது, முளைத்தல் சக்தி முளைக்கு முதற்காரணமாய் நின்று அதனைத் தோற்றுவித்தல் போல, கன்ம மலம் இன்பமும் துன்பமுமாகிய போகத்திற்கு - நுகர்ச்சிக்கு - முதற்காரணமாய் நின்று அவற்றை ஆன்ம அறிவின்கண் தோன்றுவித்தலாம். - மாயாமலம் தவிடுபோல் நின்று பந்தத்தைச் செய்தலா வது, தவிடு (முளைத்தற் சக்தி) முளையைத் தோற்றுவித்தற்குத் துணைபுரிந்து நிற்பது போல, உயிர் இன்பதுன்பங்களாகிய போகங்களை நுகருமாறு அவற்றுக்குச் சார்பாய் உள்ள தனு, 94. மேலது.-நீத்தல் விண்ணப்பம்-29 95. திருமந் இரண்டாம் தந்திரம்-மூவகைச் சீவவர்க்கம்-6