பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடுபேற்றுக்கு வழிகள் . 305 விடுவிக்கும். திருவைந்தெழுத்து முத்தி பஞ்சாக்கிரமமாக உபதேசிக்கப்பெறும். சிவாகமத்தில் ஞானபாகத்தை உணர்த்தும் முகத்தால் பதி பசு பாசம், என்ற முப்பொருளின் இயல்புகளை நன்கு உணரும் நிலைகள் உண்டாகும். முப்பொருளின் இயல்பு களை உள்ளவாறு உணர்வதற்குத் தடையாக இருந்த வினை கட்கு ஆணவமலபரிபாகம் மெலிவடைந்து ஞானாசிரியன் செய்யும் நிருவாண தீக்கையால் அடியோடு அழிந்தமையால், பொருளியல்பு முற்றும் தெளிவாக உள்ளவாறு விளங்குதலே ஞானமாகும். இந்நிலையில் பொய்யைப் பொய்யெனக்கண்டு கழித்து மெய்யை மெய் என்று உணர்ந்து பற்றும் நிலை தானே உளவாகும். ஆகவே நிருவானதீக்கை தீவிர சத்தி நிபாதம் உடையார்க்கு உரியதாய் ஞானத்தைத் தருவதாய் அமை கின்றது. இந்த நிருவான தீக்கை அதிதீவிரத்திலும் தீவிரமாய் நிற்போர்க்கு அப்பொழுதே முத்தியை அளிக்கும் வகையி லும், ஏனையோர்க்கு உடம்பு நீங்கும் காலத்து முத்தியைக் கொடுக்கும் வரையிலும் செய்யப் பெறும். இவற்றுள் முன்னது 'சத்தியோ நிர்வாண்தை என்றும், பின்னது அசத்தியோ நிர்வானதை’ என்றும் வழங்கப்பெறும். இந்தத் தீக்கை வகைகளைச் செய்வதில் ஒரு நியதியும் உண்டு. தீக்கை பெறுவோர் தகுதிக்குத் தக்கபடி வேறு வேறு வகையாகத் தீக்கை செய்யப் பெறும். இதனால் தீக்கை வகை இரண்டாகின்றன. முதலாவது அக்கினி காரியத்தால் செய்வது; இஃது அங்கிதீக்கை என்று பெயர் பெறும். இரண்டாவது அக்கினி இல்லாது செய்வது, இஃது அங்கதீக்கை என்று வழங்கப்பெறும். (6) சீவநெறி ஒழுக்கம் தீக்கை பெற்றவர்கள் சிவநெறி ஒழுக்கத்தைக் கடைப் பிடிக்க வேண்டும். இவர்கள் ஒழுக வேண்டிய ஒழுக்கம்