பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடுபேற்றுக்கு வழிகள் . 3 #5 இருக்கும். ஆதலால் இவர்க்கு இறைவன் ஒருமுறை இவர்முன் தனது உண்மை வடிவத்துடன் தோன்றி அருள்புரிந்து நீங்குவான். இவ்வாறு தோன்றும் வடிவம் சதாசிவமூர்த்தம்' என்றும், மகேசுவரமூர்த்தம்’ என்றும் வழங்கப் பெறும் என்று இருவேறு கருத்துகள் உள்ளன. உள்நின்று உணர்த்தலும் முன்னின்று உணர்த்தலும் ஆகிய இவை இரண்டும் நிராதார தீக்கை" என்று வழங்கப் பெறும் இங்ங்னம் மூவகை உயிர்களும் ஞானம்பெறுகின்றன என்பதை அறிந்து தெளிந்தோம். 47. நிராதாரம்-ஆதாரத்தோடு கூடாதது.