பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் பிறப்பன், பிறந்தால் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர் மறப்பன் கொலோஎன்றென உள்ளங் கிடந்து மறுகிடுமே." என்ற அப்பர் பெருமானின் திருமொழியால் இஃது அறியப் பெறுகின்றது. இங்ங்ணம் ஞேயத்தை மறவாத நிலையாகிய நிட்டை நிலை வியாபகமாகிய சிவத்துள் வியாப்பியமாகிய ஆன்மா அடங்கி அழுந்தி நிற்கும் நிலையாகலின் இச்சித்தாந்த முத்தி ‘அடிசேர் முத்தி' என்றும் வழங்கப் பெறுகின்றது. இச்சித் தாந்த முத்தியே உண்மை முத்தி, ஏனைய முத்தியெல்லாம் (பிறர் மதம் கூறுவன) முத்தியல்ல என்ற உண்மை சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம் முதலிய சித்தாந்த நூல்களில் விளக்கப்பெறுகின்றது. இவை ஈண்டு எடுத்துக்காட்டப் பெறவில்லை. இந்த அடிசேர் முத்தியில் உயிர் பிறவி வெப்பம் நீங்கித் தண்மையாகிய இன்பம் பெற்று மகிழ்தலால் இஃது இறைவனது திருவடி நிழல்' என்றும் பேசப் பெறுகின்றது. இந்த அடிநிழலின் இன்பத்தை, மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே.’ என்று நாவுக்கரசர் அருளிச் செய்துள்ளமையைக் கண்டு மகிழலாம். இங்கு இவ்வாறெல்லாம் விரித்துரைக்கப் பெற்ற முத்தி சித்தாந்தத்திற் கூறப்பெறும், பரமுத்தி - முடிந்த முத்தியாகும் என்பதையும் உணர்ந்து தெளியலாம். Tត្រៃ தேவாரம் 4.113:8 - 22. மேலது 5.90;1