பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடு பேறு . . . . . . . - 339

  • 3

ஆகில் என்? என்று கவலையற்றிருப்பர். இவர்கள் யார்க்கும் குடியில்லை. நமனையும் அஞ்சார். இவர்கள் எஞ்ஞான்றும் தனக்கு உவமை இல்லாதான்' தாள் நிழலில் நிற்றலால் இவர்க்கு எந்நாளும் இன்பமேயன்றித் துன்பம் இல்லை, சமய அநுட்டானம், சாதிகுல வரம்பு, உறவு, பகை முதலிய ஒன்றும் இவர்களிடம் காணப்பெறுதல் இல்லை. இந்நிலையை இவர்கள் முயன்று பிடித்தல் இல்லை. இதன்கண் அவர்கட்கு எல்லை இல்லாததோர் இன்பம் தோன்றுதலால் மதுவுண்ட வண்டு அம்மலரிலே மயங்கிக் கிடத்தல் போல இவர்கள் இறைவன் திருவடி வியாபகத்துள் நிற்பர். எனினும், இவர்கள் சிவபக்தர்களை உறவாகவும் நட்பாகவும் கருதுவர். குருலிங்கம் சங்கமம்" வழிபாடுகளைச் சிவனாகக் கண்டு வழிபடுதலையே விரும்பிச் செய்து வாழ்வர். உடம்பு நீங்கியவுடன் பரமசிவனோடு இரண்டறக் கலத்தலாகிய சாயுச்சிய பரமுத்தியைப் பெறுவர். இவர்கள் அகமுகமாகிய அதீத நிலையின் நீங்கிய புறமுகமாய் நிற்கும் பொழுதெல்லாம் மேற்கூறிய துரிய நிலையிலே நிற்பர் என்பது அறியப்படும். இறைவனது திருவடி நிழல் இன்பத்தை மாசில் வீணையும் மாலை மதியமும் வீக தென்றலும் வீங்கிள வேனிலும் . மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே. என்ற திருப்பாடலில் தம் அநுபவமாகக் காட்டுவர் அப்பர் பெருமான். பிறிதோர் இடத்தில் இப்பெருமான், 34. மேலது 6.98:1 35. குறள்-7 אי . . ; 36. குரு-ஆசாரியர்; இலிங்கம்-திருக்கோயிலில் இருக்கும் இறைவனின் திருமேனிகள்; சங்கமம்-சிவனடியார்கள். 37. அப்பர்.தே. 5.90.1