பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் அவற்றின் காரியமாகிய தாத்துவிகங்களும்.' கொள்ளப் படுதல் மரபாகும். மூவகைப் பாசங்களில் மாயையை மட்டிலும் கூறியதற் குக் காரணம் என்ன? ஏனைய எல்லாவற்றையும் விடப் பருப்பொருளாய் நின்று உயிரை மயக்கித் தனக்கு வேறாய் உள்ள பொருளை நோக்காது தன்னையே நோக்கும்; அஃதன்றியும் தனக்குமேல் வேறொரு பொருள் இல்லை யென்று எண்ணும் எண்ணத்திற்கும் காரணமாய் நிற்கும். ஆகவே, முப்பொருளின் இயல்பை உள்ளவாறு உணரும் நிலை வேறுபாடே இங்குத் தசகாரியம்’ எனப்படுகின்றது என்பது இனிது தெளிவாகும். - இனி தத்துவங்களைப்பற்றியும் ஆன்மாவைப்பற்றியும் கூறுமிடத்தில் ரூபம், தரிசனம், சுத்தி என்று மூன்று நிலைகள் குறிப்பிடப் பெற்றிருத்தலைச் சுட்டினோம். இவற்றுள் ரூபம்’ என்பது பொதுவாய் (நிருவிகற்பமாய்) அறிதல் என்றும், 'தரிசனம்’ என்பது ஐயமாக அறிதல் என்றும், சுத்தி என்பது தெளிவாக அறிதல் என்றும் உணர்ந்து கொள்ளவேண்டும். சிவத்தைப்பற்றிக் கூறுமிடத்தில் நுவலப் பெற்ற ரூபம்', 'தரிசனம்’ என்பவற்றிற்கும் இவையே பொருளாகும். ஆயினும், தத்துவத்தைப்பற்றியும் ஆன்மாவைப் பற்றியும் தெளிவாக அறிதலைச் சுத்தி’ என்று சொல்வது போலச் சிவத்தைத் தெளிவாக அறிதலைச் சுத்தி என்று சொல்வ தில்லை. ஏனெனில், தத்துவத்தைப்பற்றியும் ஆன்மாவைப் பற்றியும் தெளிவாக அறிதலின் பயன் அவற்றுள் வரும். மயக்கத்தினின்றும் நீங்குதலே யாகும். ஆதலின், அவை ‘சுத்தி' எனப்படுகின்றன. சிவத்தைப்பற்றித் தெளிவாக 53. தத்துவங்களின் கூறுகளும் காரியங்களும் தாத்துவிகங்கள் எனப்படும். - -