பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் நிகழும். ஆகவே, உபதேசத்தைக் கேட்டபின்னர்ச் சிந்தித்தலி லும் தெளிதலிலும் சிலர்க்குச் சில காலம் கழியும். அதன் பின்பு நிட்டை கூடிய வழியும் அந்நிட்டை நிலையில் நீங்காது நிற்போர் மிக மிக அரியர். மீளவும் தெளிதல் நிலைக்கு வருதலும், நிட்டையிற் செல்லுதலுமாகிய வரவு போக்குகளை உடையவரே பலராவர். இந்நிலையில் உடம்பு நீங்குதற்கண் நிட்டை நிலையிலே நீங்காது நிற்கப் பெற்றோரே இறைவ னோடு இரண்டறக் கலத்தலாகிய சாயுச்சிய பரமுத்தியைப் பெறுவர் இந்நிலையில் நிற்கப்பெறாதோர் அபரமுத்தியைப் பெற்றுப் பின்னர் பரமுத்தியை அடைவர். இனி மேலே குறிப்பிட்ட தத்துவ சுத்தி முதலிய பத்தையும் சிறிது விளக்கம் அடைவிக்கலாம். o (அ) தத்துவரூபம் முதலிய மூன்று: ஆசிரியர் உபதேசத்தைப் பெற்ற பின்னர் அதனை நூல்களின் துணை கொண்டும் தம் அறிவுக்குப் பொருந்துமாறும் ஆராய்தலே சிந்தித்தல் என்பது. இங்ங்ணம் சிந்திக்குங்கால் முப்பத்தாறு தத்துவங்களின் இயல்பையும் நூல்களில் நுவலப்பெற்றவாறே விளங்கிக்கொள்ளும் அளவில் அறிதல் தத்துவருபம் ஆகும். இதில் நிகழ்வது பொதுவுணர்வேயாகும். பின்னர் “இங்ங்ணம் சொல்லப்பெற்ற இவை பொருந்துமா” எனத் தன்னறிவில் வைத்து ஒர்தல் தத்துவ தரிசனம் ஆகும். இதில் "பொருந்தும் என்றும், பொருந்தாது என்றும் கருதும் இரண்டுபட்ட உணர்வே தோன்றும். இஃது ஐயுணர்வாதல் வெளிப்படை. அதன்பின் ஆசிரியர் உபதேசித்தபடியும், நூல்களில் சொல்லியபடியும் தத்துவங்கள் அனைத்தும் ஆன்ம அறிவு இல்வழிச் செயற்படாத சடப்பொருள்களே என்பதும், ஆதலின் இவை ஆன்மா அல்ல; ஆன்மாவின் வேறு என்பதும் உண்மையாதலை உணர்ந்து வியப்புறுதல் தத்துவ சுத்தி"யாம். இது துணிபுணர்வு என்பது தெளியப்படும்.