பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டு முறைகள் 377 அமைந்திருக்கும். இத்தகைய வாயில்கள் தத்துவத்திற்கு விளக்கமாகவும் அமைந்துள்ளன. மூன்றுவாயில்கள் உள்ள கோபுரம் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி என்ற மூன்று அவத்தைகளைக் குறிக்கின்றன. ஐந்து வாயில்கள் உள்ள கோபுரம் ஐம்பொறிகட்குக் குறியீடாக அமைந்துள்ளது. ஏழு வாயில்கள் உள்ள கோபுரத்தில் மனம், புத்தி என்னும் இரண்டு தத்துவங்கள் சேர்க்கப்பெறுகின்றன. ஒன்பது உள்ள இடத்து சித்தம், அகங்காரம் என்னும் மேலும் இரண்டு தத்துவங்கள் சேர்கின்றன. இங்ங்னம் நமது உடல் அமைப்பில் உள்ள வெவ் வேறு தத்துவங்களுக்குக் கோபுரவாயில்கள் சின்னங்களாக அமைந்துள்ளன என்பது ஈண்டு அறியப்படும். மேற்குறிப்பிட்ட வாயில்களுள் தரைமட்டத்திலுள்ள ஒருவாயில்தான் கோயிலினுள் செல்வதற்கு உதவுகின்றது. ஏனைய வாயில்கள் அமைக்கப்பெற்றிருந்தும் அவை ஆலயத் தினுள் புகுவதற்குப் பயன்படுவதில்லை. இதன்மூலம் நமக்கு ஒரு கருத்து புகட்டப்பெறுகின்றது. அக் கருத்து யாது? புறக் கரணங்களும் அந்தக்கரணங்கள் பலவும் நம்மிடம் இருப்பி னும் இறைவன் நாட்டம் கொள்ளும்பொழுது மனம் என்ற ஒரு கரணமே நமக்குப் பயன்படுகின்றது. ஏனைய கரணங்களை யெல்லாம் அவ் அவற்றின் நிலையிலே வைத்து விட்டு மனம் இறைவனை நாடி உள்முகமாகப் போக வேண்டும் என்பது கோட்பாடு. ஐம்பொறிகளைக் கொண்டும் மனம் புத்தி முதலிய வற்றைக் கொண்டும் புற உலகை அறிகின்றோம். புற உலகை அறிகின்ற செயலை அப்படியே நிறுத்தி வைத்துவிட்டு மனத்தைத் துணையாகக் கொண்டு பரம்பொருளினிடத்து உள் முகமாகப் பயணம் போகவேண்டும் என்னும் கோட்பாட்டை இராசகோபுர வாயிலினுள் செல்லும் நுழைவு விளக்கிக் காட்டுகின்றது - -