பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டு முறைகள் 39 | பெரியார் ஒருவர் நம் இல்லத்திற்கு வருகை புரிவதாக இருந்தால் அவரை வரவேற்க இல்லத்தை அலங்கரிக்கின் றோம். நம்மையும்'ஓரளவு அலங்கரித்துக் கொள்ளுகின்றோம். இன்னும் பலவேறு செயல்களில் ஈடுபடுகின்றோம். தூயதும் பெரியவற்றிற்கெல்லாம் பெரியதுமாகிய பரம்பொருளை - மெய்ப்பொருளை ~ நம்உள்ளத்தில் எழுந்தருளப் பண்ணுவ தற்கு இன்னும் எத்தகைய பெரிய ஆயத்தம் பண்ண வேண்டும் என்பதை மறந்து விடலாகாது. அரசர்க்கெல்லாம் அரசனாகிய ஆண்டவனின் வாழும் இடம் நம் உடம்பு. இது நிலை குலைந்து போயின் அவன் இதில் கோயில் கொள்ள இசையான். அவனுக்கு ஏற்றதாக இதனைச் செய்வித்தலே நம் தலையாய கடமை. இதற்கு மகத்துவம் - பெருமை - வருவதும் அவனது அருளாலேயாகும். ஆகவே, இதனை யாண்டும் ஈசுவரனுடைய ஆலயமாகச் செய்தல் செயற்கரிய செயலாகின்றது. பூசை என்பதன் பொருள் ஆழ்ந்து நோக்கினால் இறைவனைப் போற்றாதார் இலர். சிலர் இறைவனை உணர்ந்து வணங்குகின்றனர்; வேறுசிலர் அத்தகைய உணர்ச்சியின்றியே வணங்குகின்றனர். நாத்திகர் என்போரும் ஓர் உயர்தன்மையில் நம்பிக்கை வைத்து அந்த உயர்தன்மையையே வழுத்தப்படும் பொருளாகக் கொள்கின்றனர். தெய்வத் தன்மையை உடைய தைப் பார்த்து மெச்சுதல் மாந்தர் இயல்பு. உயர்தன்மையை மெச்சும்போது மெச்சுபவரே உயர்தன்மையை எய்துகின்றனர். (i) மெச்சுதலும் ஒருவகையில் பூசையாகின்றது. நன்மையனைத்திற்கும் உறைவிடம் இறைவன், அவனையடைய ஆசைப்படுவதும் அந்நன்மையை அடைய விரும்புவதும் ஒன்றே. பூசை என்பதற்கு நன்மையில் விருப் பம் என்ற பொருளும் உண்டு. பேராற்றலைக் கானுமிடத்துத்