பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் 1 (பதி) 61 மாட்டாது அவ்வாறாயினும் முதல்வன் உயிராகவும் அதன் வேறாயும் நிற்பன், உயிர் அங்ங்ணம் நில்லாது.” (ஆ) இறைவன் பொருட்டன்மையால் வேறாதற்குக் 'கண்-அருக்கன்போல் (கண்ணொளியும் கதிரவன் ஒளியும் போல) என்று உவமை கூறப்பெறும். கண்ணொளியும் கதிரவன் ஒளியும் இருளும் ஒளியும் போலத் தொடர்பே இல்லாத வேறு வேறு பொருளாகாது; இரண்டும் கலந்து நின்றே பொருள் தன்மையால் வேறாகின்றது. கண்ணொளியால் பொருளைக் காண்கின்றோம்; கதிரவன் ஒளி பொருளைக் காட்டுகின்றது. இவையே இவற்றின் வேறுபட்ட தன்மைகள், உடலினின்றும் உயிர் வேறு காணப்படாமையின் வேறாதற்குஇவ்வுவமை கூறி விளக்கப் பெறுகின்றது. (இ) உயிர்க்கு உயிராதல் தன்மையால் உடனாதற்கு கண்ணொளியும் ஆன்மபோதமும் (உயிரும் அறிவும் போல என்ற உவமை கூறப் பெறுகின்றது. கண்ணொளியும் ஆன்ம போதமும் சொல்லும் பொருளும்போல அன்றி, கண் ஒரு பொருளைக் காணும்பொழுது ஆன்ம போதமும் உடன் சென்றே கண்டு அப்பொருளை இன்னதென அறிகின்றது. இதனால் உடனாதற்கு இவ்வுவமை சொல்லப்பட்டது.” 38. சி.ஞா.போ. 2ஆம் சூத்திரம் அதிகரணம் 1. சுட்டுமுறுப்பும்' என்ற வெண்பாவையும், அதன் உரையையும் காண்க (சிற்றுரை) 39. இக்கூறிய மூன்று தன்மைகளில் ஒவ்வொன்றை மாத்திரமே கூறும் ஒவ்வொரு சாரார் உள்ளனர். (i) இறைவனும் உயிர்களும் ஒன்றே என்பவர் பொன்னும் மணியும்போல்’ என்ற உவமை கூறுபவர் இவர்கள் அபேதவாதம் கூறுவோர். இவர்கள் தம் கொள்கை நிலை பெறுவதற்கு பிரம்மம் கேவலம், அத்துவிதம்' என, அத்துவிதம் எனபதனோடு கேவலம் என்ற ஒரு சொல்லைச் சேர்த்துப் பொருள் கொள்வர். இதனால் இவரது கொள்கை