பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கௌதமர்

சக்தி.சத்தி


கெளதமர்-கெளதம புத்தர் ஏழு முனிவர்களில் ஒருவர்.

கெளமாரம் - முருகக்கடவுளே பழம் பொருள் என்று வழி படும் சமயம்.

சகசம் - இயல்பு. அனாதியுடன் கூடியது. முன்பே உடன் தோன்றிப் பொருந்தியது.

சகசமலம்- உடனிருக்கும் ஆணவ மலம் உயிருக்கு இயற்கைக் குற்றமாதல் பற்றி இப்பெயர். ஆன்மாவை மறைப்பது ஆன் மாவிற்கு ஆணவம் சகசமலம். சி.மலம்.

சகச்சிரம் - 28 ஆகமங்களில் ஒன்று.

சகம் - வையகம்.

சகமார்க்கம் - நான்கு சமய நெறிகளில் ஒன்று. தோழமை நெறி பா. மார்க்கம்.

சகயோகம்-தோழமை யோகம் சாயுச்சியமாகும்.

சகலர் - முத்திற உயிர்களில் கலையுள்ள ஒருவர்.மும்முலம் உடையவர். இவர்களுக்கு இறைவன் சீவன்முத்தர் வழியாகத் தான் நின்று மெய்யுணர்வு அளிப் பான். பா. விஞ்ஞானகலர், பிரளயாகலர் ஒ. அகலர்.

சகலம் - சாக்கிரமும் கலாதியும் சேர்ந்தது. காரணமூன்றவத்தைகளில் ஒன்று. ஆணவத்தோடு மாயை, கன்மம் ஆகிய இரு மலங்களும் சேர்ந்திருக்கும் நிலை, ஆன்மா தான் சிறிதே அறிவு பெற்று, உலகியலில் காணப்படும். அந்த ஈடுபாடே இறப்பு, பிறப்பு ஆகியவற்றை ஆன்மா அடையக் காரணம். சக்தி, சத்தி சுருங்கக் கூறின், சகலம் மருள் நிலையாகும்.

சகல அவத்தை - காரண மூன்ற வத்தையில் ஒரு வகை. இதில் ஆன்மா உலகத்தை அறியாது. ஆணவ மேலீட்டால், அது குறிப்பிட்ட பொருளிலேயே இருக்கும்.

சகல கேவலம் - சகலர்க்குரியது. சகலர் என்பவர் மும்மலத்தினர்.

சகல சாக்கிரம் -இதில் எல்லாக் கருவிகளும் நன்கு இயங்கும். ஆகவே, ஆன்மா இந்நிலையில் உலகத்தை நன்றாக அறிந்து நுகரும். சிவதத்துவம் ஐந்தும் குறைவின்றி நிற்கும்.

சகல சொப்பனம் முதலியவைபுருவ நடுவில் நிற்கும். இருப்பினும் இடையிடையே சிவ தத்துவம் ஐந்திலிருந்து நான்கு, மூன்று, இரண்டு.ஒன்று என்று குறைவதால், உலக அறிவு இடையறவின்றி நிகழும்.

சகலன் - சகலான்மா.

சகளம் - உருவத்திருமேனி எ-டு சகளமாய் வந்து என்று உந்தீபற (தி உ1).

சகளத் திருமேனி - சிவன் உருவடிவம். -

சகளத்துவம் - கிரியை மிகுந்து ஞானம் குறைந்துள்ள ஈசுவரத் தத்துவம்.

சகளநிட்களம்- இலிங்கமாகிய சிவன் அரு உருவத்திருமேனி,

சகளப்பெற்றி - உருவத்திருமேனி பெருமை எ-டு பிறங்கிய நிட்கள சகளப்பெற்றி (சிபி 14).

சகன்-முழுமுதற் கடவுள்.

சக்தி. சத்தி, சத்தி - தெய்வ வல்லமை, ஆற்றல் அல்லது அருள். அறிவு முதலிய பண்புகள் சத்தி எனப்

101