பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிவபூசை

சிவவேடம்


சிவபூசை - விதிமுறைப்படி செய்யும் சிவவழிபாடு.

சிவபூசை இயல்பு - கிரியை, சரியை, யோகம், ஞானம் ஆகிய நான்குபடிகளைக்கொண்டது.

சிவ பூரணம் - சிவ நிறைவு.

சிவவேதம்- இது ஏழு சதாசிவம், ஈசன், அரன்,அயன்,அரி.ஒ. சத்திபேதம்.

சிவப்பேறு- சிவனை அடைதல்.

சிவமயம் - சிவதன்மை,

சிவமுனி-ததிசியோடேததிசி என்பவர் சைவ முனிவர். திருமால் அவரிடம் போரிட்டுத் தோல்வி யுற்றவர். இவர் உள்ளே புகுந்து திருமாலைப் பிடித்து மார்பிலே உதைத்து ஆழியைப் பறித்து முறித்து அதனைத் திருமால் வயிற்றிலே வைத்தார். அழகு பொருந்திய ஓர் உருவைத் தாமே தர்ப்பையால் உண்டாக்கித் திருமாலை அதைக் கொண்டு மயங்கி விழுமாறு எரித்தார். ஆகவே, திருமால் வினைமுதல் என்று கூறுவதற்கில்லை (சிசிபவ.297)

சிவமூர்த்தங்கள் - இவை 25 1) சந்திர சேகரர் 2) உமாமகேசர் 3)ருடபாருடர்4)சபாபதி5) கலி யாண சுந்தரர் 6) பிட்சாடனர் 7) காமாரி 8) அந்தகாரி 9) திரி புராரி 10) சலந்தராரி 11) விதித் வம்சர் 12) வீரபத்திரர் 13) நரசிங்கர் 14) அர்த்தராரீசுரர் 15) கிராதர் 16) கங்காளர் 17) சண் டேசு அனுக்கிரர் 18) சக்கிர பாதர் 19) கசமுக அனுக்கிரர் 20) ஏகபாதர் 21) சோமாச கந்தர் 22) அனங்க சுகபிருது 23) தெட்சிணாமூர்த்தி 24) இலிங்கோற்பவர் 25) நிபாதனர்.

பொது:1) விநாயகர் 2) வைரவர் 3) முருகன் சிறப்பு:1)நடராசர்2)உமாதேவி 3) சந்திரசேகர் 4) கோமேச கந்தர் 5)தெட்சிணாமூர்த்தி 6) பிட்சாட்னர்.

சிவபோகம்-1) சிவானந்தம் 2)தம் செயலுள் ஒன்றாய்த் தன்னை இழந்து, இறைவன் மயமான ஆன்மாவின் ஆனந்த அனுபவ நிலை பெறுதல் 3) குற்றம் செய்பவரையும் திருத்தித் தனதாக்கும் நெறி.

சிவராத்திரி சிறப்புத் தலங்கள் இவை 1) கச்சி ஏகம்பம் 2) திருக்காளத்தி 3) கோகர்ணம் 4) திருப்பருப்பதம் (சீசைலம்) 5) திருவைகாவூர்.

சிவருபம் - சிவவடிவம் செயல் 10இல் ஒன்று. இறைவன் முத்தி அளிப்பான் என்னும் உணரும் நிலை.

சிவலிங்கம் - சிவ உருவம். சைவர் வழிபடுவது.

சிவ வடிவு - மன்னுயிர்தோறும் நிலை பெற்றிருக்கும் பரம் பொருள் கருணையே திருவடி வாகக் கொண்டு உயிர் வினை மாசு கெட்டு, இன்புறுவதற்காகப் படைத்தல் முதலிய ஐந் தொழில்களையும் செய்கின்றது. இவ்வாறு காத்தருளுவோன் சிவபெருமான் ஒருவனே என உயிர் தன் அறிவில் காண்பது.

சிவ வழிபாடு - ஆகம அடிப்படையில் நடைபெறும் தொழு முறை.

சிவவேடம் - உருத்திராக்கமும் திருநீறும் அணிந்த கோலம்

121