ஞானதிரோதகம்
ஞான விரி
ஞானதிரோதகம் - அறிவு மறைப்பைச் செய்யும் பொருள்
ஞானத்திற்குக் காரணம் - சரியை கிரியை யோகங்கள் ஆகியவை முற்றுதல்,
ஞான தீக்கை - ஞானத்தை ஞான குரு உணர்த்தும் முறை, வேறு பெயர் நிருவாணத்தீக்கை தீக்கை ஞானம் தரும். ஞானம் வீடு தரும்.
ஞானத்தொழில் பிரகாசம் - காயம் அகலத் தோன்றும் அருள் ஒளி.
ஞான நடனம் - திருவருளால் சிவத்துடன் இயைந்து நிற்கும் நிலை.
ஞான நிட்டை -சிற்றறிவு ஒழிந்து நேசமோடு சேர்ந்து உயர்பரத்து நிற்பது ஞான நிட்டை என்பது • சிவப்பிரகாசம் கூறும் உண்மை
ஞான நிலை - ஞானம் மேவும் நிலை,
ஞானநூல் - மெய்யறிவு நூல்
ஞான பாதம் - சிவாகமம் நாற் பாதங்களுள் பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள் பற்றிக் கூறும் முதற்பகுதி.
ஞானபாவம் -ஞானமும் புண்ணி யமும். உண்மைச் சிவ புண்ணி யம், உபாயச் சிவ புண்ணியம் என ஞானம் இருவகை. முன்னது முத்திக்காகவும் பின்னது உலகப் பொருள் காரணமாக வும் செய்யப்படுவன. ஞானத் தால் ஞானம் நீங்கிய உண்மைச் சிவ புண்ணியத்திற்குப் பயன் சாலோக சாமீப சாரூபம் என்னும் பரமுத்தி, ஞானத்தில் ஞானத்துக்குப் பயன் சாயுச்சியம். உபாயச் சிவ புண்ணியத் திற்குப் பயன் இப்புவன முதல் சுத்தமாய் புவனம் வரையுள்ள புவனங்களில் போகங்கள் நுகர்தல்.
ஞானபூசை - இதிலுள்ள ஐந்து நிலைகள். ஞான நூல்களைத் தான் ஓதுதல். அவற்றைப் பிறர்க்கு ஓதுவித்தல், அவற்றின் பொருளைத் தக்க ஆசானிடம் கேட்டல், தக்கவர்களுக்குத் தான் உரைத்தல், அவற்றின் பொருளைத் தான் சிந்தித்தல்.
ஞான மார்க்கம் - ஞான நெறி, நான்கு சமய நெறிகளில் சிறந்த நன்னெறி.
ஞானாமிர்தம் - சைவ சித்தாந்த நூல், திரு உந்தியாருக்கு முன் தோன்றியது.
ஞான யாகம் - நிறை ஞானத்தினால் கண்டதோர் பொருளைக் காணல்.
ஞான வகை - முதல் வகை; 1) கேட்டல் 2), சிந்தித்தல் 3) தெளிதல் 4) நிட்டை கூடுதல், சிவஞானபோதம் நூற்பா 8இல் கேட்டலும் 9இல் தெளிதலும் சிந்தித்தலும் இல் நிட்டையும் கூறப்படுதல். இரண்டாம் வகை; 1) மதி ஞானம் 2) சுருதஞானம் 3) அவதிஞானம் 4) மனப்பரிய ஞானம் 5) கேவல ஞானம் மூன்றாம் வகை; 1) பதிஞானம் 2) பசுஞானம் 3) பாச ஞானம்
ஞான வாய்மைப்பயன் - நன் னலம் வாய்ந்த அறிவே ஞான வாய்மை. பயன் மூன்று; 1) ஆன்ம தரிசனம் 2) ஆனம் சுத்தி 3) ஆன்ம இலாபம்.
ஞான விரி -இது பலவகை, வரு ஞானம், பாச ஞானம், பசு ஞா னம், பதிஞானம் பல ஞானம்,
140