பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தடத்தம்

தத்துவம்


தடத்தம் - 1) பொது 2) பஞ்ச கிருத்தியங்களைப் பண்ணும் பதிநிலை.

தடத்த இலக்கணம் - பொது இயல்பு. எ-டு மாயா கருவிகளுடன் கூடி, அக்கருவிகளின் கூடுதல் குறைதல்களால் அஞ்சவத்தைப் பட்டுநிற்றலே ஆன்மாவின் பொது இலக்கணம் என்னும் தடத்த இலக்கணம்.

தட்டம் - கைகொட்டல், எ-டு கும்பிட்டுத் தட்டம் இட்டுக் கூத்தாடித்திரியே.(சிசிசுப323).

தடையும் விடையும் - சைவ சித்தாந்தக் கருத்துகளுக்குப்பிறர் முரணாகக் கூறுவது தடையாகும். அதற்கு மறுப்பாகச் சிவஞானபோதம் கூறுவது விடை.

தணவாத - நீங்காத.

தண்டம் - ஒறுத்தல்.

தண்டாத - நீங்காத.

தண்டியடிகள், தண்டி - பிறவிக்குருடர் திருவாரூர் சோழநாடு. திருவாரூர் குளத்தில் மூழ்கிக் கண் பெற்றவர். இலிங்க வழிபாடு (63).

தண்ணார் - இறைவன். எ-டு தண்ணார் அருள்.(தண்+ஆர்).

தண்டீசர் - சண்டேசுவர நாயனார். பாதகம் பழி என்று பாராமல் தன் தந்தையாகிய வேதியனைத் திருமஞ்சனக் குடத்தை ஏற்றியதற்காக அவர் பாதங்களைத் துண்டித்தவர். இவ்வல்வினை மெல்வினை ஆயிற்று திகப.99) மேலும், சிவபூசைக்குரிய நெல்லைத் தம் சுற்றத்தார் உண்டதற்காகக் கோட்டிலி நாயனார் அவர்களைத் துணித்தார். தன்னிடம் வேலை செய்த பணியாள் சிவனடியாராக வந்த போது தன் மனைவியார் நீர்வார்க்கத் தாமதித்ததால், அவர் கைகளைக் கலிக்கம்ப நாயனார் வெட்டினார்.

தத்துவம் - பொருள்; முதல் கருவி, உள்ளது. உண்மை, மற்றும் கொள்கை, மெய்ம்மை, முதன்மை, மெய்மம், நெறிமுறை எனலாம்.நிறுவப்படாத உண்மை கொள்கை, எ-டு ஐன்ஸ்டின் கொள்கை நிறுவப்பட்ட உண்மை நெறிமுறை. எ-டு ஆர்க்கிஸ்மடிஸ் நெறிமுறை இறைவன் மெய்ப்பிக்க முடியாத உண்மையாகும். தோற்றம் மாயையிலிருந்து தோன்றுவது. பின்,இதிலிருந்து உலகம் தோன்றுவது சகலமும் தத்துவம் என்றுங் கூறும் சிவஞான சித்தியார் (16 சுவ) வகை: சைவ சித்தாந்தம் ஏற்கும் தத்துவங்கள் 36 அவையாவன. 1) ஆன்ம தத்துவம் 24. 2) வித்யா தத்துவம் 7. 3) சிவதத்துவம் 5. விளக்கம் அவ்வத் தலைப்பில் காண்க.

வேறுபடும் வகை.

1) தத்துவம் 31, சிவ தத்துவம் நீங்கலாக.
2) தத்துவ தாத்துவிகம் 36+60=96
3) பிற சமயங்கள் ஏற்கும் ஆன்மதத்துவம் 24
4) பிரகிருதியில் ஒன்றிலிருந்து மற்றொன்றாக 23 தத்துவங்கள் தோன்றும்
5) தத்துவம் 25; ஆன்ம தத்துவம் 24+1 புருடன் = 25
6) தத்துவம் 26; ஆன்ம தத்துவம் 24+ புருடன் 1+ இறைவன் 1=26

7) தத்துவம் 31; வித்தியா தத்துவம்



142