தத்துவக் கருவிகள்
தத்துவ வடிவு
8) ஐம்பொறி 5, தொழிற்பொறி 5) தன்மாத்திரை 5, அந்தக் கரணம் 4 பூதம் 5 = 31
அசுத்த மாயையிலிருந்து அசுத்த காலமும் அசுத்த நிலம் முடிவாக 31 தத்துவங்கள் தோன்றுபவை.
பெயர்
எண்ணிக்கை
தொகுதி
தோன்றுமூலம்
1)சிவதத்துவம்
5
செலுத்து காண்டம்
சுத்தமாயை
2)வித்தியா தத்துவம்
7
நுகர் காண்டம்
அசுத்த மாயை
3)ஆன்ம தத்துவம்
24
நுகரப் படுங்காண்டம்
பிரகிருதி மாயை
தத்துவக் கருவிகள் - இவை 15 ஐம்பொறிகள் 5, தொழிற் பொறிகள் 5, அகக்கருவி 4, புருடன் 1.
தத்துவக் காட்சி - 36 தத்துவங்களையும் தூயதும் தூய்மை அல்லாததும் ஆன சுத்தா சுத்த மாயையின் விளைவு என்றும், அவை அறிவற்றன என்றும் அறிவதாகும்.
தத்துவ சுத்தி - 10 செயல்களில் ஒன்று. 36 தத்துவங்களுக்கு ஆன்ம அதீதமாய் நிற்கும் நிலை தெளிவுக் காட்சி மூன்றில் ஒன்று.
தத்துவ ஞானம் -மெய்யறி, பேரறிவு.
தத்துவ ஞானி - மெய்ஞ்ஞானி, மெய்யறிவாளர். எ-டு உணர்ந்தோன் தத்துவ ஞானி.
தத்துவ தரிசனம் - 10 செயல்களில் ஒன்று. ஆன்மா தன்னறிவிலே விளங்கக் காணும் நுகர் நிலை.
தத்துவத்திற்கு உரியோர் - 31 சுத்த தத்துவம் சுத்த புவன வாசிகளாகிய விஞ்ஞானகலர் பிரளயகலர் என்னும் இரு வகையினருக்கும்; 31 அசுத்த தத்துவம் அசுத்த மாயா புவன வாசிகளாகிய அனைத்து உயிர்கட்கும் உரியவை.
தத்துவ தூய்மை - அதாவது தத்துவ நீக்கம், 36 தத்துவங்களில் எதனையும் தான் பற்றி நில்லாமல் அவற்றை விட்டு நீங்குவதாகும்.
தத்துவ பிரகாசம் - தத்துவப் பிரகாசர் இயற்றிய தத்துவ நூல் இவர் மெய்கண்டார் மரபில் தோன்றியவர். சித்தியாரைப் போல் சைவ சித்தாந்தத்தை நன்கு விளக்குவதும் அளவையை 9 பாடல்களில் கூறுவது, மேலும், சரியை, கிரியை,யோகம் என்னும் முதல் மூன்று பாதங்களை விரித்துரைக்கும் தமிழ் நூல் இது ஒன்றே.
தத்துவமசி - "அது நீ" என்னும் பொருளை உடைய வேதாந்த மகாவாக்கியம்.
தத்துவரூபம் -10 செயல்களில் ஒன்று. தத்துவங்களின் குணங்களை ஆன்மா காணும் நிலை.
தத்துவதிரயம் -1) சித்து, அசித்து ஈசுவரன் என்னும் மூவகை உண்மைகள். 2) ஆன்ம தத்துவம், விந்தியா தத்துவம், சிவ தத்துவம் என்னும் மூவகைத் தத்துவங்கள்.
தத்துவ வடிவு - நிலம் முதல் சிவம் ஈறான 36 தத்துவங்களால் கூட்டப்பெற்ற உடல், கருவி, உலகு, நுகர்வு, செய்தி ஆகியவற்றை உயிர் தன்னின் வேறாகக் காண்பது.