பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தருக்க மதத்தவர்

தற்பதம்



யால் அறியப்படான் என்று பகரும் சைவ சித்தாந்தம். உள்ளது என்னும் உணர்வை உபலப்தி என்றும் இல்லது என்னும் உணர்வை அனுலப்தி என்றும் தருக்க மதத்தவர் கூறுவர்.

தருக்க மதத்தவர் -அளவை அறிவால் அறியப்படுபவனே இறைவன் என்னுங் கொள்கையினர்.

தருணம் - தக்க சமயம்

தருணன் - தக்க சமயத்தவன் இறையோன்.

தருதல் - விளக்குதல்.

தருமம் - நல்லவை செய்தல் ஒ.அதர்மம்.

தருமி - தருமம் உடையது.

தருமிவாசகம் - பண்பியாகிய சொல்.

தலம் - திருத்தலம். இறைவன் உருவுள்ள கோயில் சிவத்தலம். சிவத்தலம் பல திருமுறைகளில் பாடப்பெற்றுள்ளது.

தலமரம் -தல விருட்சம். ஆகமப்படி ஒவ்வொரு கோயிலிலும் இருப்பது.

தலை - இடம்.

தலைப்படுதல் - சேர்தல்.

தலை பறிஉற்று - எண்ணற்ற சாத்திரங்கள் எல்லாம் கற்று, அதனால் எல்லோரும் தர்க்கம் பேசித் தலை பறிகொடுக்கத் தேவை இல்லை என்று உமாபதி சிவம் சங்கற்ப நிராகரணத்தில் மாயாவாதிகளுக்குக் கூறுகின்றார்.

தலைமைப்பாடு - மேம்பாடு

தலைமையோன் - தலைமைச் சிறப்புள்ள மெய்கண்டார்.

தலைவன் - நேர்மையாளர்.

தவர் - தவத்தோர்.

தவரடி - தவமுடையோர் திருவடி

தவம் - உயர்ந்த குறிக்கோளை அடைய ஒருவர் செய்யும் முயற்சி. அவ்வகையில் இறைவன் அருளைப் பெறச் செய்யும் பெரு முயற்சி தவமாகும். இறைவனை அறிய, மெய்யுணர்வோடு தவமும் உயிர்க்கு வேண்டும் தவசிகள் தமக்குற்ற துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு பிறர்க்குத் துன்பம் ஒருபோதும்செய்யார்.கருமமே கண்ணாயினாரும் தவத்தைக் குறிக்கோளாகக் கொள்வர். இது தவத்தின் பொது இயல்பு. இனித்தவத்தின் சிறப்பியல்பாவது சரியை, கிரியை, யோகம் எனச் சாத்திரங்கள் ஓதுஞ் செயல்முறைகளும் தவமே, தவத்தை அறம் பிறழாச் செயலாகவும் கொள்ளலாம்;

தவலோகம் - தவர் வாழுமிடம்.

தவ்வையார் -தமக்கையார்.

தவிர்த்துதறில் - அடக்கிச் செய்தல்.

தவிசு - இருக்கை, அடி எ-டு தேன் அமர் தவிசு

தளை - கட்டு

தற்கிழமை - இரண்டற இருத்தல். தாதன்மியம்.

தற்கிழமைப் பொருள் - ஒரு பொருளை எனது என்று கூறுமிடத்து அதனைத் தானாகக் கருதிக் கூறுதல் ஒ, பிறிதின் கிழமை,

தற்கேடர் - தம்மையே தேடும் அறிவிலார்.

தற்பதம் - பிரம வடிவம்.

145