பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாண்டவம்

தாபர சங்கமம்




2) திருஆருர் - அ.சபா தாண்டவம்

3) மதுரை - ஞான சுந்தரத் தாண்டவம்

4) புக்கொளியூர் - ஊர்த்துவத் - தாண்டவம்

5) திருமுருகன் பூண்டி - பிரமதாண்டவம்


தாண்டவம் - கூத்து


தானு - நிலைபேறுடைய இறைவன். எடுதாணுவின் தண்கழல்


தாத்துவிகம் - தத்துவங்களின் காரியம். இது 60. 1) பிருதிவிக் கூறு நிலம் (5) 2) அப்புவின் கூறு-நீர் (5) 3)தேயுவின் கூறு:தீ (5) 4) வாயுவின் கூறு- வளி (10) 5)ஆகாயக்கூறு-வான் அல்லது நாடிகள் (10) 6) தொழிற் பொறி புலன்கள் (5) 7) அகங் காரக் கூறு 3 8) குற்றம் (5) 9) குணம் (3) 10) வாக்கு (4) (11) சுத்த மாயா விரி புலன்கள் 5. பா. தத்துவம்.


தாதான்மியம் - ஒன்றுபட்டிருத்தல். ஒருமையில் இருமை. வேறுபெயர் தற்கிழமை, சம வேதம், சமவாயம்.


தாதான்மிய சத்தி - சிவனை விட்டு ஒருபோதும்.நீங்காத ஆற்றல்


தாதான்மிய சம்பந்தம் - குணத்திற்கும் குணிக்குமுண்டான ஒற்றுமைச்சம்பந்தம் சமவாயம் எனவும் இரு பொருள்களுக்குள்ள ஒற்றுமை சம்பந்தம் எனவும். இருவகை. இவற்றுள் குணகுணிக்குமுள்ள ஒற்றுமை தாதன்மியமாகும். இரு பொருள்களுக்குள்ள ஒற்றுமை அத்துவிதமாகும். சிவம் குணரி, சத்தி குணம். சிவமும் சீவனுங்கலந்திருக்கும் தாதான்மாயம் அத்துவித சம்பந்தம்.


தாந்திரிகம் - தந்திரத்தின் வழி தோன்றிய புதிய மதம். தாழ் வாகக் கருதப்படுவது.


தாதியர் - 1) வெள்ளாட்டியர். 2)வினையடி


தாது - பூத்தாது.


தாது ஏழு - இரதம், இரத்தம், சுக்கிலம், மூளை, தசை, எலும்டி, தோல், இரத்தத்தை நீக்க ஆகும்.


தாதுப் பிரத்தியம் - பகுதிவிகுதி.


தாதுவும் பரமேசுவரனும் - அரியின் அகந்தையை அழிக்கும் முகத்தான் அயன் பிச்சைக் கலம் ஏந்தி ஐயம் கேட்கப் பல பலிகளாலும் கலம் நிறையவில்லை. அப்பொழுது திருமால் செருக்காலே யான் இதனை நிறைப்பேன் என்று நெற்றி யின் நரம்பினைத் திறந்து விடப்பீறிட்டது குருதி அக்குருதி போதவில்லை. திருமாலும் மயக்கமுற்று வீழ்ந்தார். தேவர்கள் இரந்து வேண்டப் பரனும் அருள்கொண்டு எழுப்ப எழுந்த திருமால் பரமன்பின் நடந்து சென்றார். தாது இரத்தம்.


தாதை - தந்தை, பிரமன்.


தாபதர் - முனிவர்.


தாபம் - உள்வெதும்பித்தல். சுற்றத்தை விட்டுப் பிரிவதற்கு ஆற்றாமை.


தாபரம், தாவரம் - நிற்பன,திணை, எ-டு தாவரம் இலிங்கம். இறை வன்மேனி தாபர மேனி.


தாபரசங்கமம் - இறைவன் திரு மேனியும் அடியார் திருமேனியும் அல்லது இறைவனும் சிவனடியாரும் எ-டு தாபர சங்கபமங்கள் என்று இரண்டு உருவில் நின்று (சிசிசுப 118).

147