பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாபனம்

தான் பணியை நீக்குதல்



தாபனம் - நிலை நிறுத்தல். வழி படப்பெறும் உருவத்தில் எழுந்தருளும் இறைவனைத் தகுந்த மந்திரங்களாலும் முத்திரைக ளாலும்நிலைப்பெறச்செய்வது. வழிபாடு நிறைவுறும் வரையில் இறைவன் இருப்பை இடை விடாது உளங்கொள்ளுதற்கு நிலை நிறுத்த உதவுவது.


தாபனமுத்திரை - சமயமுத்திரையில் ஒரு வகை


தாமதம் - முக்குணங்களில் ஒன்று.


தாம் - உயிர்கள்.


தாம் அடங்க - சிவனிடம் ஒடுங்க.


தாம்பிராதிபதிகம் - பெயரும் பகாப்பதமும் ஒப்பிலா தாம் பிராதி பதிகமாம்.


தாம்பூலம் - வெற்றிலைப் பாக்கு வைத்தல். வழிபாட்டு முறைகளில் ஒன்று.


தாமோதரன் - திருமால்


தாய் - தாங்குபொருள். எ-டு ஊசல் கயிறு அற்றால் தாய் தரையே யாம் துணையால் (சிபோ பா 8) நான்காம் அதிகரண ஏது).


தாயார் - 1) திருமகள் 2) பாராட்டுத்தாய். ஊட்டுந்தாய், முலைத்தாய், கைத்தாய் என ஐவர். 3) அரசன் தேவி, குருவின்தேவி அண்ணன் தேவி மனைவியை ஈன்றாள் தன்னை ஈன்றாள் என ஐவர்.


தாரகம் - நிலைக்களம், பிரணவம் எ-டு தாரக மந்திரம்


தாரகப் பிரமம் - பிரணவம், எ-டு தாரக மந்திரம்.


தாரகப் பிரமம் - பிரணவ வடிவமான பரபிரமம்.


தாரகன் - பற்றுக் கோடாகவுள்ள இறைவன்.


தாரணி - உலகம், யமன்.


தாரணியோர் - உலகத்தோர்.


தார்ம் - 1) பிரணவம் 2) ஏழுவகைப் பண்களுள் ஒன்று 3) சத்தி


தார் - மாலை.


தார்க்கிகர் - அளவை நூல் கொள்கையர்.


தாவர வடிவு, உரு - நிலைத்த உருவம். சிவலிங்கம்.


தாவில் - முடிவில்லாத.


தாவு - வலி, வளம் எ-டு செல்வத்தாவு.


தாழ்தல் - இழிதல்.


தாழ்ந்த மனம் - பணிவுள்ளம்.


தாழ்ந்தமனம் உடையாள் - உமை.


தாழ்மணி நா - தாழ்ந்துள்ள நா.


தாள் - ஆற்றல், முயற்சி, திருவடி


தாள் முத்திரை - சமயதீக்கை முத்திரைகளில் ஒன்று.


தாற்பரியம் - உட்கருத்து நோக்கம்


தான் - உயிர், முதல்வன்.


தான் உரைத்தான் மெய்கண்டான் - இதில் பொதிந்துள்ள வரலாறு. சிவபெருமான் நந்திதேவருக்கும் நந்திதேவர் சனற் குமார முனிவருக்கும், சனற் குமார முனிவர் சத்திய ஞான தரிசினிகளுக்கும் சத்திய ஞான தரிசினிகள் பரஞ்சோதி முனிவ ருக்கும் பரஞ்சோதி முனிவர் மய்கண்ட தேவருக்கும் சிவ ஞானபோத நூலினை வழிவழி உபதேசித்து அருளினர். மெய் கண்டார் அதனைப் பிரதிக்ஞை, ஏது, எடுத்துக்காட்டு என்னும் அளவை உறுப்புகளுடன் முதல் தமிழ் நூல்வடிவமாக அருளிச் செய்தார்.


தான் பணியை நீக்குதல் - எல்லாம் சிவன் செயல் எனக் கொள்ளுதல்.

148