பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிபதார்த்தம்

திருஞான சம்பந்தர்


திரிபதார்த்தம் - பா. திரிகம்.


திரிபுடி - காணபான், காட்சி, காட்சிப்பொருள் ஆகிய மூன்றும் அறிபவன் (ஞாதிரு) அறிவு (ஞானம்) அறியப்படும்பொருள் (ஞேயம்)என்றும் கூறப்படும்.


திரிபுடை - 7வகைத் தாளங்களில் ஒன்று.


திரிமலம் - மும்மலம்.


திரிமுர்த்தி - பா.மும்மூர்த்தி.


திரியக் காண்டல், திரிவுபலன் - திரிவுக் காட்சி.


திரிவிதம் - மூன்று வகை


திரிவு - வேறுபடுதல்.


திருஅருள் - திரோதன ஆற்றல்.


திருஇடை மருதூர் தலங்கள் - இவை 10. 1) திரு இடைமருதூர் மகாலிங்கம் 2)திருவாவடுதுறை நந்தியம் பெருமாள் தலம் 3) திரு வலஞ்சுழி - விநாயகர் தலம் 4) திருவேரகம் (சுவாமி மலை) முருகன் தலம் 5) திருவாப்பாடி - சண்டேசுவரர் தலம் 6) சூரியனார்கோவில் நவக்கிரகத்தலம் 7) சிதம்பரம் - நடராசர் தலம் 8) சீர்காழி வைரவர் தலம் 9) திருஆருர் - தியாகராயர் தலம் 10) திரு இரும்பூளை தட்சிணா மூர்த்தி தலம்


திருக்கண் - அருட்பார்வை.


திருக்கல்முடித்தல் - குடமுழுக்கு செய்தல்


திருக்களிற்றுப்படியார் - தான் செய்தபின் இதனைத் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் தில்லையில் கூத்த பெருமான் திருவடி முன்வைத்தார். அப்பொழுது யாவரும் எதிர்பாராத அதிசயம் ஒன்று நடந்தது. அங்குள்ள அனைவரும் வியந்து நோக்கக்களிற்றுக்கை நிமிர்ந்து அதனைக் கூத்த பெருமான் திருவடியில் சேர்த்தது. அன்று முதல் இதற்குத் திருக்களிற்றுப்படியார் என்னும் பெயர் வழங்குவதாயிற்று. 100 வெண்பாக்கள் கொண்டதும் சைவ சமயக் குரவர் நால்வரின் பெருமையையும் ஏனைய திருத்தொண்டரின் மாண்பையும்.இது சிறப்புறக்கூறுகின்றது. சைவ சித்தாந்த உண்மைகளையும் விளக்குவது இது தில்லைச் சிற்றம்பலவர் என்னும் சிவப் பிரகாசனார் இதற்கு உரை செய்துள்ளார். கி.பி.12.


திருக்குளம் - தலப்பெருமைக்கேற்ப, இது அமையும். திரு விழாக் காலங்களில் இறைவன் திருஉருவம் புனித நீராடுவதற்கும் பத்தர்கள் நீராடுவதற்கும் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டில் ஒருமுறை தெப்பத் திரு விழா நடைபெறும்.


திருக்குறிப்புத் தொண்ட நாயனார் - ஏகாலியார். காஞ்சிபுரம்தொண்டை நாடு சிவனடியார் குறிப்பு அறிந்து ஆடை ஒலித்துக் கொடுத்தவர் சங்கம் வழிபாடு (63)


திருகு - மலக்கோணை.


திருக்கூட்டம் - அடியவர் குழாம்.


திருக்கோலம் - கடவுளுக்குச் செய்யும் அழகு.


திருச்சிலம்பு - தெய்வச் சிலம்பு.


திருஞான சம்பந்தர் - அந்தணர் சீர்காழி. முதலில் பாடிய பதிகம் "தோடுடைய செவியன் "படி, ஞானத்தில் கிரியை நெறி, மகன்மை நெறி, முத்தி சாமீபம் பாடிய பதிகம் 16,000. இன்றுள்ள பாடல்கள் 4137.

150