பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமறுமார்பன்

திருமேனி



திருமறுமார்பன் - திருமால்


திருமால் - விட்டுனு.


திருமால் ஆயுதம் - சக்கரம், தனுசு, வாள், தண்டு, சங்கம் என 5.


திருமாலுக்கு எட்டான் - புவி முதல் வான் வரை வளர்ந்த திருமாலுக்கும்மேலாக உயர்ந்த சிவன்.


திருமாளிகைத் தேவர் - 9ஆம் திருமுறை ஆசிரியர்கள் 9 பேரில் ஒருவர்.


திருமுகம் - தெய்வச் சந்நிதி.


திருமுலை - அருட்பால் சுரக்கும் உறுப்பு. எ-டு சுரந்த திருமுலைக்கே துய்ய சிவஞானம் (திப. 54).


திருமுறைகள் - நாயன்மார்கள் பாடிய திருப்பாடல்கள் (12)

1) முதல் ஏழு திருமுறைகள் - தேவாரம் 2) முதல் மூன்று திருஞானசம்பந்தர் பாடியது. 3) அடுத்த மூன்று திருநாவுக்கரசர் பாடியது. 4) 7ஆம் திருமுறை சுந்தரமூர்த்தி பாடியது 5) 8 ஆம் திருமுறை மணி வாசகர் அருளியது. 6) 9ஆம் திருமுறை திருவிசைப்பா, திருப் பல்லாண்டு 9 பேர் செய்தருளியது. 7) 10ஆம் திருமுறை திருமந்திரம் திருமூலர். 8)1ஆம் திருமுறை 40 நூல்கள் கொண்டது. 12 பேர் செய்தவை. 9) 12ஆம் திருமுறை திருத்தொண்டர் புராணம். சேக்கிழார் செய்தருளியது. திருமுறைகள் தோத்திரப் பாடல்கள். சமயக் கண்கள். சிவஞானபோதம் எழ அடிப்படையாய் இருந்தவை. இவை பத்தி நெறிபரப்புபவை.


திருமுறை பாடியவர்கள் - 1) நாயனார்கள்; அப்பர், சம்பந்தர், மணிவாசகர், திருநாவுக்கரசர், காரைக்கால் அம்மையார். ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் 2) ஏனையோர்; திரு மாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த் தேவர், பூந்துருத்தி நம்பி காட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், புருடோத்தம நம்பி, சேதிராயர் திருவாலவுடையார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரர் தேவ நாயனார்.


திருமுலர் - இடையர், ஊர் சாத்தனூர், சோழ நாடு. பசுக்களை மேய்த்து வந்த மூலன் இறந்ததும் அவன் உடலில் சென்று பசுக்களின் துயரை நீக்கியவர். மூலன் உடலிலேயே திருவாவடுதுறை திருக்கோயிலில் அரச மரத்தடியில் சிவயோகத்தில் அமர்ந்து ஆண்டொன்றுக்கு ஒரு பாடல் வீதம் 3000 திருமந்திரப் பாடல்களை அருளிச் செய்த சித்தர், கோயில் வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தசைவசமயம்,சமணர்கள் காலத்தில் தன் சிறப்பையும் முதன்மையையும் இழந்தது. இதனை மீண்டும் பெறத் திருமநதிரம்பெரிதும் உதவியது. கிரியை, சரியை, யோகம், ஞானம் என்னும் 4 பாதங்களையும் கூறுவது.இதுமுப்பொருள் பற்றியும்பேசுவது குருவழிபாடு (63).


திருமேனி - இறைவன்திருவுருவம் கோயிலில் எழுந்தருளியுள்ளது. அருவம், அருவுருவம், உருவம் என மூன்று வகைப்படும் இவற்றுள் அருவுருவம் கண்ணிற்குப் புலப்படாது.

153