பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமேனி வழிபாடு

திருவாமுராளி செயல்



அருவுருவம் கண்ணிற்குப் புலப்படும்.அப்பொழுது முகம் முதலிய உறுப்புகளின்றிப் பிழம்பு மட்டுமே தெரியும். இதுவே திருக்கோயில்களில்,காணப்படும் சிவலிங்கத் திரு மேனி. இது சதாசிவ மூர்த்தமாகும். உருவம், முகம், கை, கால் முதலிய உறுப்புகளுடன் காணப்படும். இந்நிலையி லுள்ள எல்லாம் மகேசுர மூர்த்தங்கள். இவற்றில் உருவத் திருமேனியை வழிபடுதல் சரியை. இலிங் கத்தை வழிபடுவது கிரியை. இதில் மனம் மொழி மெய் என்னும் மூன்றும் செயற்படும். சிவபெருமானது அருவத் திரு மேனியைதியானித்தல்யோகம் ஆகும். அகத்தே பாவிக்கப்படு வதால் அருவமாகும். திருக் கோயில் திருவுருவங்கள் நிலைத்திருப்பதால் அவை தாபரத்திருமேனிகள். அடியார்கள் எங்கும் இயங்குவதால் அவர்கள் மேனி சங்கமத் திருமேனி எனப்படும். இறைவன் திரு மேனி அத்துவாக்களாலும் பஞ்சமந்திரங்களாலும்ஆனது.


திருமேனி வழிபாடு - இறைவன் திருவுருவத்தை வணங்குதல் தில்லைக்கூத்தன் திருமேனியைக் கண்டு வணங்கிய சுந்தரர் நிலையைச் சேக்கிழார் கூறுவது திருமேனி வழிபாடே


திருவடி - இறைவன் தாள். திருவடி அடைதல்- பிரிப்பின்றி நிற்றலை அறிதல்.


திருவடித் தீக்கை - சீடன் தலையில் குருதம் காலடியை வைத்து அருள் புரிதல்.


திருவருட்பயன் - 14 மெய்கண்ட நூல்களுள் ஒன்று. இறைவன் இயல்புகளைக் குறள் வெண்பாக்களால் 10 அதிகாரங்களில் 100 பாடல்களில் கூறும் நூல். ஆசிரியர் உமாபதி சிவாச் சாரியார்


திருவருட்யா - இராமலிங்க அடிகள் இயற்றிய தோத்திரப் பாடல்கள். ஞான நெறி பரப்புவது. திருவமுது படையல் உணவு.


திருவள்ளுவர் - எக்காலத்துக் குரிய திருக்குறள் செய்தருளிய பேராசான். இது மெய்ப் பொருள் பற்றியும் நுணுக்கமாகப் பேசுவது. முதல் அதிகாரமே கடவுள் வாழ்த்து, மெய்யுணர்வு, துறவு, நிலையாமை, வினை, ஆணவம் (யான் எனது என்னும் செருக்கறுப்பான்) கன்மம், ஊழ், மாயை, உயிர் முதலியவை பற்றி நுட்பமாக உரைப்பது படித்து மகிழவதற்கும் பின்பற்றுவதற்குமுரியன அவை.


திருவாசகம் - மணிவாசகர் செய் தருளிய தோத்திர நூல் திருவா சகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது பொது மொழி. 49 ஒத்தினைக் கொண்டது.


திருவாதவூர் ஆளும்தேன் - மணிவாசகர். திருவாதவூரை ஆண்டருளிய தேன்போல மனத்தில் இனித்தலை உடையவர். சிவபேரின்பத்தைத் திருவாசகமாகப் பாடி மாயப் பிறப்பறுத்தவர். (திப. 73)


திருவாமுராளி - திருநாவுக்கரசர்


திருவாமுராளி செயல் - பா. திரு நாவுக்கரசர்செய்தஅற்புதங்கள்.

154