திருவாலவாயுடையார்
திக்கை.திட்சை
திருவாலவாயுடையார் - 11ஆம் திருமுறையில் திருமுகப் பாசுரம் பாடியவர்; 12 நூலாசிரியர்களில் ஒருவர்.
திருவாலியமுதனார் - 9ஆம் திருமுறை ஆசிரியர்கள் 9 பேரில் ஒருவர்.
திருவெழுத்து - திருவைந்தெழுத்து - நமசிவாய.
திருவேடம் - செறிதலினால் திரு வேடமும் சிவ உருவமே ஆகும்.
திரை - அலை, எ-டு. திரைகடல்
திரோதகம் - மறைத்தலைச் செய்வது மறைப்பி.
திரோதகம், ஞான - அறிவை மறைத்தல். இதனால் விளைவது அறியாமை.
திரோதனம் - 1) மூன்று பாசங்களில் ஒன்று. துணைக் காரணமாக இருப்பது 2) மறைத்தல்.
திரோதன சத்தி - சிவனின் 5 சத்திகளில் ஒன்று. ஆன்மாக்களுக்கு உலக பட்டறிவினைக் கொடுத்து உண்மையை மறைக்கும் ஆற்றல் உலகை வினைப் படுத்தும்பொழுது மூன்றாகும்; 1) விழைவாற்றல் 2) அறிவாற்றல் 3) வினையாற்றல் முதலாவது ஒரே நிலையாக இருப்பது. இரண்டாவதும் மூன்றாவதும் தனித்தும் மிக்கும் குறைந்தும் செயற்படுபவை.
திரோதாயி - மறைக்கும் பொருள்.
திரோபிப்பவர் - திரோபவம் பண்ணுபவர்.
தியானம் - தியானித்தல். ஞானநிலைக்கு வழி வகுப்பது.
திலம் - எள், எ-டு திலம் அளவே செய்திடினும்.
தில்லையான் - தில்லைவாழ் கூத்தன்.
திவ்வியம் - தெய்வத்தன்மை.
திவ்விய பிரபந்தம் - ஆழ்வார்களின் திருப்பாடல்கள். பக்தி நெறியை விளக்குபவை.
திறல் - வெற்றி,
திறம் - கொள்கை
தினைத்துணை - தினையளவு இது மிகச்சிறுமைக்குக் காட்டப்படும் பிரமாணம். இச்சொல்லாட்சி திருக்குறளில் அதிகமுள்ளது.
தீ.
தீக்கூறு - இதய வெப்பம், பசித்தீ, கண்வெப்பம், உடல்வெப்பம் பைத்தியம் என ஐந்து
தீக்கை,தீட்சை - பொருள் கட்டுகள் அனைத்தையும் அவிழ்ப்பது. அதாவது, மலத்தை நீக்குவது சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்றின் வழிக் குருவால் செய்யப்படுவது.
நிலை - 1) தன்மையில் நின்று ஆளுதல் - விஞ்ஞானகலர் 2) முன்னிலையில் நின்று அருளுதல் - பிரளயாகலர் 3) படர்க்கையில் நின்று அருளுதல் - சகலர். முதல் இரண்டும் நேரே செய்யப்படுபவை.
நிராதர தீக்கை என்று பெயர் பெறும் மூன்றாவது மறைமுகமாகச்செய்வது. இதற்குச்சாதார தீக்கை என்று பெயர்.
- வகை - மூன்று
1) சமயத் தீக்கை; சரியை பொருட்டுச் செய்யப்படுவது. மந்திரங்களுக்குரியது கிடைப்பது உருத்திரபாதம்.
2) சிறப்புத் தீக்கை, கீரியை, யோகம், பூசை ஆகியவை பற்றிச் செய்யப்படுவது.
3) ஞான
155