பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாகர்

நாரணன்


நா

நாகர் - தேவர்.

நாகார்சுனர் - தம் செல்வாக்கையும் அறிவையும் பயன்படுத்திப் பெளத்தத்தைத் தீவிரமாகப் பரப்பியவர்.

நாகம்மா நதிமதியம் - நாகம் நல்ல பாம்பு மாநதி, கங்கைய மதிம் திங்கள்.

நாகமுழை - குகை.

நாச உற்பத்தி - நொடிதோறும் கன்மம் அழிந்து கொண்டே இருப்பினும், தோற்றமும் இடையறாது இருத்தலால் அது முடிவின்றி இருப்பதாய் உள்ளது. கன்மத்தின் இந்நிலையே நாச உற்பத்தி. அதாவது அழிவில் உண்டாவது.

நாடகம் - கூத்து.

நாடரிய - நாடுதற்கு அரிய.

நாடறிய - எல்லோரும் அறிய.

நாட்டு - உறுதி செய்.

நாட்டில்- கிரியை, சரியை செய்தல்.

நாடி - 1) கருதல் அளவையால் ஆராய்ந்து 2) இடை, பிங்கலை சுழுமுனை என மூன்று வகை.

நாண் - வடம், அணி வகை.

நாண்மீன் - விண்மீன். அசுவினி முதலிய 27.

நாத சம்பிரதாயம் - சிவனைப் போற்றும் மரபு.

நாதம் - சத்தி தத்துவத்திற்கு மேலுள்ள சிவதத்துவமும் அப்பொகுட்டிலுள்ள 51 விதைகளும். அதாவது, 36 ஆம் தத்துவம் ஆகும்.

நாத்தி - இன்மை

நாத்திகம்- கடவுள் இன்மை, கடவுள் இல்லை என்னுங் கொள்கை. ஒரு சமயம் ஒ. ஆத்திகம்

நாத்திக மதம் - தத்துவநூல் இதனை உலகாயதம், சாரு வாகம் (சாருவாகர் தழுவிய மதம்), என்றும் குறிப்பிடும். வேதத்தை வெறுப்பது. உலகம் ஒன்றே பொருள் என்றும் புலன் கடந்த பொருள் இல்லை என்றும் கூறும் தந்தை பெரியார் நாத்திகத்தைப் பரப்பியவர்.

நாதாந்தம் - ஞான நெறிகளில் ஒன்று. பஞ்ச கருத்தாவில் ஒருவன்.

நாதாந்த நாடகம் - தத்துவத் திருக்கூத்து.

நாதாந்தன் - சிவன்.

நாபி - உந்தி, கொப்பூழ்.

நாயகன் - சிவன்.

நாயகி- பார்வதி.

நாயன்மார்கள், நாயனார்கள்- சிவத் தொண்டர்கள் அதிபத்த நாயனார் முதல் விறல்மிண்ட நாயனார் வரை 63 பேர் இருண்டகாலத்தில் பக்தி நெறி பரப்பியவர்கள்.

நாயனார் தமைப் பூசித்தான்- ஒரு காலத்தில் திருமால் இராமனாய்த் தோன்றித் திருமகள் தன்னுடன் காட்டுக்குச் சென்றார். அப்பொழுது இராவணன் ஒரு பொய்மானை ஏவ அம்மான் பின்னால் இராமன் செல்லத் திருமகளை இராவணன் துக்கிச் சென்றான். இராமன் இலங்கைக்குத் தன் படையுடன் சென்று இராவணனைக் கொன்று திரும்பினான். அக்கொன்ற பாவம் நீங்கச் சேதுவிலே வந்து பரமேசுவரனைப் பூசை செய்து தீவினை நீக்கிக் கொண்டான் இராமன் (சிசிபப 285).

நாரணன் - திருமால்.

167