பஞ்ச மூலம்ம்
படியில்... அன்பர்
பஞ்சமூலம்- செவ்வியம், சித்திர மூலம், கண்டுபரங்கி, பேரரத்தை, சுக்கு என 5.
பஞ்சலிங்கம்- பிருதிவிலிங்கம், அப்புலிங்கம், தேயுலிங்கம், வாயுலிங்கம், ஆகாசலிங்கம். இவை ஐந்தனுக்கள்.
பஞ்சாக்கரம் - 1) தூலபஞ்சாக்கரம் நகரத்தை முதலாக உடையது. 2) சூக்கும பஞ்சாக்கரம். நகரமகரங்கள் இரண்டுமின்றி ஏனைய மூன்றெழுத்தும் முன்னும் பின்னுமாக மாறுதலால் ஐந்து எழுத்து ஆகிச்சிகரத்தை முதலாக உடையது. வேறு பெயர் காரண பஞ்சாக்கரம். ஸ்ரீபஞ்சாக்கரம் என்பது முத்தி பஞ்சாக்கரம்.
பஞ்சாக்கரம், முத்தி- பதி ஞானத்தால் பதியை அறிவினுள் கண்ட பின், அக்காட்சி மலத்தின் வாசனை காரணமாக முன்போல மறையாமல் எப்பொழுதும் நிலைத்து நிற்பது கருதிச்சொல்லப்படும் பஞ்சாக்கரம் குரு மரபுகளில் இது ஆங்காங்கு ஒவ்வொரு வகையாக உபதேசிக்கப்படுவது.
பஞ்சாக்கினி வித்தை- மறு பிறப்பு உண்டாகும் முறை. உயிரானது முறையே சொர்க்கம், முகில் மண்டபம், நிலம், தந்தை, தாய் என்னும் 5 இடங்களில் தங்காதுவந்து பிறக்கும்தன்மை.
பஞ்சாசாரம்- ஐவகை ஒழுக்கம். இலிங்கசாரம், சதாசாரம், சிவாசாரம், பிருத்யாசாரம், கணா சாரம்.
பஞ்சாயதனபூசை - கணபதி, திருமால், சிவன், பார்வதி கதிரவன் ஆகிய ஐந்து கடவுளர்களுக்கும் வீட்டில் செய்யும் அன்றாட வழிபாடு.
பஞ்ச வாசகம்- இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம்.
படர்தல்- செல்லுதல், பரத்தல்.
படம் - சட்டை.
படலம்- உறை, கூடுபோர்வை எ-டு படலம் நீங்குதல் கடன் ஆகும்.
பட்டாசாரியார்- மீமாஞ்சகருள் ஒரு சாரர். நிட்காமிய வினை வீடு தருமாதலால் சரியை முதலிய சிவபுண்ணியங்கள் ஞானத்தை நல்கும் எனல் தேவை இல்லை என்பது இவர்கள் கருத்து. இக்கூற்றைச் சிவ ஞானபோதம் மறுக்கும்.
பட்டாசாரியர் மதம்- மீமாஞ்சகர் சமயம்.
பட்டோலை- ஆணை ஒலை.
பட்டோலை தீட்டும்- அவரவர் கணக்குப் பிள்ளையாய் இருந்து பட்டோலை எழுதி ஒப்பு விக்கும் சிவன்.
படிகம்- பளிங்கு. எ-டு பன்னிறம் காட்டும் படிகம்.
படிகள் - பாதங்கள் நான்கு.
பட்டினத்துப் பிள்ளையார்- 11 ஆம் திருமுறை ஆசிரியர்கள் 12 பேரில் ஒருவர். இவர் அருளிய நூல்கள்.
1) கோயில் நான்மணிமாலை.
2) திருக்கழுமல மும்மணிக்கோவை.
3) திருவிடை மருதூர் மும்மணிக்கோவை.
4) திருவேகம்பமுடையார்திருவந்தாதி.
5) திருவொற்றியூர்ஒருபாஒருபஃது.
படியில் அருத்தி செய்த அன்பர்- சரியை கிரியை, யோகம் செய்பவர்.
178