பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதினெண்மர்

பரமனார் இகலிடாமல்


பதினெண்மர் - ஐம்பெருங்குழு ஐவகைச் சுற்றம் எண்பேராயம் ஆகிய இம்மூன்றிலும் உள்ளவர்.

பதினோராம் திருமுறை - இது 40 நூல்களைக் கொண்டது. இவற்றை அருளியவர்கள் 12 பேர். விளக்கம் அவ்வவ்வாசிரியர் தலைப்பில் காண்க.

பந்தம் - தளை, கட்டு ஆணவத்தோடு ஆன்மா அத்துவிதமாய் இருத்தல்.
பந்தனை - பாசம்.
பந்தித்தல் - பற்றுதல்.
பயப்பித்தல் - பெறுவித்தல்.
பயன் - பேறு.
பயிலல் - கற்றல்.
பயிற்சி - பழக்கம்.
பரகதி - நற்கதி.
பரக்கும் - பரவும்.
பரகாயம் - பிற உடம்பு, எ-டு பரகாயம் தன்னில் பாய்வோர் (சிசிசுப128)
பரங்கெட்டார்- சிவனடி நோக்குபவர்.
பரசமயம் - பிற சமயம், எ-டு உலகாயதம்.
பரசரீரம் - பிற உடம்பு.
பரசாதி - அதிகமானவைகளில் தோன்றுவது.
பரசு - மழு, எ-டு பரசுடன் பிறந்தான் தானும் (சிசிபப 286).
பரசுராமன்- திருமாலின் ஆறாம் அவதாரம். இராமர் மூவரில் ஒருவர் பரசுடன் பிறந்தவன். ஆகவே, பரசுராமன்.
பரஞ்சோதி முனிவர் - அகச்சந்தான குரவர் நால்வரில் ஒருவர்.
பரஞானம் - பிறவழியறிவு.அதாவது அருளால் நிகழும் அறிவு.
பரணதேவ நாயனார் - 11ஆம் திருமுறையில் சிவபெருமான் திருவந்தாதி பாடியவர். 12 ஆசிரியர்களில் ஒருவர்.
பரதிப் பிரமாணம் - பிறிதாலுணர்தல்.
பரதந்திரம் - பிறன் வயமுற்று அவனைத் தலைமையாகக் கொண்டு நிற்றல்.
பரத்வாசர் - ஏழு முனிவர்களில் ஒருவர்.
பரதுக்கதுக்கன் - புத்தன்.
பரபக்கம் - பிறர்பக்கம் எ-டு சிவஞான சித்தியார் பரபக்கம் ஒ. சுபக்கம்.
பரப்பிரமம் - பரமசிவன் பரம
சுகம் - மேலான இன்பம்.
பரம் - பரம்பொருள்.
பரம்பரை - ஒன்றன்பின் ஒன்று வருவது. கால்வழி, வாழையடி வாழை.
பரமன் - சிவன்.
பரமனார் இகலிடாமல் - ஒரு காலத்தில் நான்முகனும் திருமாலும் கூடித் தங்களின் மாறுபட்ட படைப்பாலேதான் வினை முதல் என்று கூறினர். அவர்களிடமிருந்து மாறுபடாமல் அவர்கள் செருக்கை அடக்க, அயன் நினைத்தார். “உங்களால் எம் அடிமுடி அறிபவரே இவ்வுலகின் வினை முதல் என்று அயன் அறைந்து, அழல் பிழம்பாக நின்றார். இருவரும் திருமுடியைக் கண்டு வருவோம் எனப் புறப்பட்டனர்.நான்முகன் அன்னமாகப் பறந்தார். திருமால் பன்றியாக உருவெடுத்தார் பாதாளத்தைப் பிளந்து பார்த்தார்.இருவரும் திருமுடியைக் கண்டாரில்லை. இகலிடாமல் மாறுபடாமல் (சிசிபப 296).

center

181