பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பன்னிருபடலம்

பாஞ்சாக்கினி வித்தை



பன்னிருபடலம் - தொல்காப்பியர் முதலிய 12 பேரால் 12 படலமாகச் செய்யப்பட்ட ஒரு புறப் பொருள் இலக்கண நூல்.

பன்னிறம் - சார்ந்தவற்றின் நிறம்.

பன்னினம் - ஐந்நிலை அவத்தை எ-டு மன்னிய கரண மாறாட்டத்தில் பன்னினம் (சிநி 4).

பன்னும் - கூறும். எ-டு பன்னும் அதி தெய்வங்கள்.

பனுவல் - நூல் எ-டு சிவஞான போதம் ஒரு மெய்யறிவுப் பனுவல்.

பனை தாளம் - பொற்றாளம். பாடல் பாடச் சம்பந்தர் சிவனிடம் திருக்கோலக்காவில் பெற்றது. பா. திருஞானசம்பந்தர் செய்த அற்புதங்கள்.

பா

பா - வெண்பா, ஆசிரியப்பா,கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு.

பாகடை - பாக்கும் வெற்றிலையும்

பாகம் - பகுதி, பக்குவம்

பாகர் - குதிரைப்பாகர், யானைப்பாகர்.

பாக்கியம் - பேறு.

பாகுபாடு - பிரிவு.

பாசம் - பந்தம், தளை, கட்டு. முப்பொருள்களில் மூன்றாவது. நிலம் முதல் நாதம் முதலாகச் சொல்லப்படும் பாசக் கூட்டம். பா. பற்று.

பாசஞானம் - வாக்குகளாலும் கலாதி அறிவாலும் அறியும் அறிவு.

பாசட்சயம் - பாச நீக்கம்.

பாசத்தார் - பாசக் கட்டுடையவர்.

பாச நீக்கம் - ஆறு அத்துவாக்களையும் உயிர் படிப்படியாக விட்டுச் செல்வதே பாச நீக்கம். இது துன்ப நீக்கம். ஆனால் வீடுபேறே நிலையானது.

பாசமும் பதியும் - பா. பதிபாசத் தொடர்பு.

பாசமோசனம் - பாச விடுதலை. எ-டு பலவிதம் ஆசான் பாச மோசனம்தான் பண்ணும் (சசிசுப 255)

பாசயித்திரு (நுகரி) காண்டம் - பா காண்டம்.

பாசர்வஞ்ஞர் - மிகச்சிறந்த நியாய சாத்திர அறிஞர்.

பாச வீடு - பாச விடுதலை

பாசனம் - மண்பாண்டம்.

பாசுகரர் - சிவசூத்திர வார்த்திக ஆசிரியர்.

பாசுபதம் - 5 அகப்புறச் சமயங்களில் ஒன்று. -

பாசுபதவாதம் - மாயையும் கன்மமுமே ஆணவ மலமாகும் என்னும் கொள்கை. இக்கொள்கையினர் பாசுபதவாதிகள்.

பாஞ்சராத்திரம் - இது ஒரு வைணவ ஆகமம். இதன் வழித் தோன்றிய வைணவ மதம் பாஞ்சராத்திரம். இது ஒரு புறச்சமயம். இராமானுசர் பிரம சூத்திரத்திற்குச் செய்த விசிட்டாத்துவம் என்னும் கொள்கையையே இதன் தத்துவம் பெரும்பாலும் பின்பற்றுகிறது. நாராயணனே பரம்பொருள். அவனைச் சரண் அடைதலே வீடு பேறு என்னும் கொள்கை. இக் கொள்கை உடையவர் பாஞ்சராத்திரிகள். இவர்களுக்கும் சிவாத்துவிதிகட்கும் பல வகையில் ஒற்றுமை உண்டு.

பாஞ்சாக்கினி வித்தை - சுவர்க்கம், மேகமண்டலம், நிலம், தந்தை,

185