பாடம்
பாதகம்
தாய் என்னும் ஐந்திடத்தையும் அக்கினியாகவும், அவற்றிற் பொருந்திய ஆன்மாவை ஆகுதியாகவும் தியானிப்பது ஒரு சாதகமாதலின் இது பஞ்சாக்கினி வித்தை எனப்படும்.
பாடம் - படிக்கப்படுவது.
பாடல் பெற்ற தலங்கள் - தேவாரத்தில் பாடல் பெற்ற தலங்கள் 274. பாடிய பதிகங்கள் 749.
நாடு
தலம்
பதிகம்
தமிழ்நாடு
265
729
சேரநாடு
1
1
ஈழநாடு
2
3
வடநாடு
6
16
274
749
சமயக்குரவர் நால்வரும் பாடிய தலங்கள்: மூவரும் பாடியவை 44. சம்பந்தரும் திருநாவுக்கரசரும் பாடியவை. 52. சம்பந்தரும் சுந்தரரும் பாடியவை 13, அப்பரும் சுந்தரரும் பாடியவை 2. அப்பர் மட்டும் பாடியவை 28. சுந்தரர் மட்டும் பாடியவை 25. சம்பந்தர் மட்டும் பாடியவை 110. ஆக 274
பாடலார் - பாடுவோர். அகன்பதியரில் ஒருவகையினர்.
பாட்டாசாரியர் மதம் - உயிர் சுதந்திர அறிவுடையது என்னுங் கொள்கை. '
பாடாணம் - கல், பருப்பொருள். எ-டு பாடாணம் போல் கிடந்து (சிசிசுப 127)
பாடாணம் போல்கை முத்தி - கல்போல் அறிவின்றி இருப்பதை வைசேடிகர் முத்தி என்பர். முத்தியில் ஒருவகை. பா. முத்தி.
பாடாண வாதசைவர் - சகசமலம் உயிரை விட்டு நீங்காது என்னுங் கொள்கையினர். இக்கொள்கை உடையவர் பாடாணவாதி.
பாடிகாவல் - சிறைக்காவலர்.
பாடியங்கள் - உரைகள். வட மொழியில் வேதாந்த சூத்திரம் எனப்படும். பிரமசூத்திரத்திற்கு அவரவர் தம் கொள்கைக்கு ஏற்ப உரைகள் வகுக்கப்பட்டன. அவ்வுரைகளே பாடியங்கள் ஆகும். தமிழில் திராவிட மாபாடியம் என்பது சிவஞான முனிவர் சிவஞான போதத்திற்கு எழுதிய பேருரையாகும். சிற்றுரை பாடியம் எனப்படும்.
பாடு - பக்கம்
பாடை - மொழி, பிணக்கட்டில்.
பாணர் - பாடுவோர்.
பாண்டாரகர் தே.இரா - முனைவர். இவர் கருத்துப்படி அசோகனுடைய ஏழாவது தூண் கல்வெட்டில் பாபநேஸூ ஆஜிவிகேஷூ என்னும் சொல் பிராமண ஆசீவர்களைக் குறிப்பிடுவதாகும்.
பாண்டாரகர் ரா.கோ - முனைவர். சீகண்டர் என்பவர் மனித உருவில் இலகுலீசருக்குக் குருவாக இருந்திருக்க வேண்டும் என்பது இவர்தம் கருத்து.
பாண்டியன் - பாண்டிய அரசன். இவன் கேட்பதற்குரியதாகச் சம்பந்தர் ஆட்பாலவர்க்கருள்” என்னும் பதிகம் பாடினார்.
பாணி - கை. தொழிற்பொறிகள் 5இல் ஒன்று தொழில் எடுத்தல் அல்லது பற்றல்.
பாதகம் - தீமை, ஒ சாதகம் பஞ்சமா பாதகம் கொலை, பொய், களவுகள், குரு நிந்தை