பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரகாசம்

பிரணவ கலைகள்


சுருங்கக் கூறின், இறைவன் உயிர் ஆகிய இரண்டுமே பர பிரமம் என்னும் பிம்பத்தின் பிரதி பிம்பங்கள் ஆகும்.

பிரகாசம் -காட்சி,புலனாதல்,சித்து விளக்கம். இயல்பாக எளிதில் உரைப்படுவது.

பிரகாசம் இன்மை- சாதனங்களைப் பயன்படுத்தினாலும் அறியப்படுதல் இல்லாமை.

பிரகலாதன்- இரணியன் மகன். ஒரு பரம பாகவதன்.

பிரகிருதி- பருவுடல் மூலம் இயல்பாய் உள்ளது. மும்மாயையில் ஒன்று. வேறு பெயர்அவ்வியத் தம் (வெளிப்படாமை) புருடன் முன் தொழிற்படுவது. இதிலிருந்து ஒன்றிலிருந்து மற்றொன்றாக 23 தத்துவங்கள் தோன்றும்.

பிரகிருதி- துர்க்கை, இராதை, இலட்சுமி, சரசுவதி, சாவித்திரி என்னும் பஞ்ச சத்திகள் ஐவகைப் பிரகிருதிகள் ஆகும்.

பிரகிருதி தத்துவம்- மூல தத்துவம், சடத்துவம், இராசம், தாமதம் என்னும் முக்குணங்களையே வடிவமாக மூலப்பிரகிருதி உடையது.அக்குணங்கள் வெளிப்படாமல் நிற்கும் நிலையே பிரகிருதி அல்லது மூலப்பிரகிருதி பிரகிருதி என்பது தமிழில் பகுதி எனத் திரித்து வழங்கப்படும். இது கலையில் தோன்றுவது. முக்குணங்கள் வெளிப் படாமல் நுண்ணிலையில் இருந்தால், பிரகிருதிக்கு அவ்வியத்தம் என்று பெயர். வியத்தம் - வெளிப்பாடு. அவ்வியத்தம் - வெளிப்படாமை. முக்குணங்கள் வெளிப்பட்டுச் சமமாய் நிற்கும் நிலை குண தத்துவம் எனப்படும்.இக்குணத் துவமே சித்தம் என்னும் அந்தக் கரணம் என்பது பலரது கருத்து. சைவ சித்தாந்தம் ஏற்கும் 36 தத்துவங்களாவன சிவதத்துவம் 5, விந்தியாதத்துவம் 7, ஆன்ம தத்துவம் 24, சைவம் நீங்கலான ஏனைய மதங்கள் ஏற்கும் தத்துவம் 24.

பிரகிருதியும் புமானும்- இவ்விரண்டையும் இரட்டை எனலாம். இவற்றில் பிரகிருதியானது மூலம், புரியட்டகம், விகர்தி என்று மூன்றாகித் தூல மாயும் சூக்குமமாயும் பரவி நிற்கும். புமானே சுத்த புருடன், இது பிரகிருதியின் திருமுன் மழுவின் செய்தியைப்போல அறியாமையோடு கூடி உலகப் பிறப்பு வேறுபாடுகளுடன் விரிந்து நிற்கும்.

பிரகிருதிபுவனாந்தம்-பிரகிருதி தத்துவத்திலுள்ள புவனம் வரை.

பிரகிருதி மாயை- மும்மாயைகளில் ஒன்று. வேறு பெயர் மான்

பிரசாதம்-1)இறைச்சோறு 2)திருவருள்.

பிரணவம்- ஒம். இதில் அகரம் அகங்காரத்தினையும், உகரம் புத்தியினையும், மகரம் மனத் தினையும், விந்து சித்தத்தினை யும், நாதம் உயிரினையும் செலுத்தும்.

பிரணவ கலைகள்- ஒம் என்பதே பிரணவம், அஃது ஐந்து கலை கள் அல்லது கூறுகளைக் கொண்டது. அவை அகரம், உகரம், மகரம், விந்து, நாதம் என்பவை. அவையே முறை

191