பிரேரகாண்டம்
புட்கள்
பிரேரகாண்டம்- பா.காண்டம்.
பிரேரகாசாரியன்- சைவத்திற்குரிய மாணாக்கர்க்குத் தக்க ஆசிரியரைக் காட்டி உய்விப்பவன்.
பிரேரரி - உண்டாதல், சத்தி பிரேரரிப்பது.
பிள்ளை- சிறுவன். திருஞான சம்பந்தர் அவர் சிறுவனாக இருந்த பொழுது பார்வதி ஞானப் பால் ஊட்டியது. எ-டு சுரந்துண்டார் பிள்ளை எனச்சொல்லி (திப 54).
பிறவாநெறி- வீடுபேறு.
பிறப்பு- உலகியல், நமசிவாய.
பிறவாமை- இவ்வுலகில் பிறவா திருத்தல். அடியார் வேண்டுவது இதே.
பிறழ்தல்- மாறுபடுதல்.
பிறிதின் இயைபு நீக்குதல் - மற்றொன்றின் தொடர்பை விலக்குதல்.
பிறிதின் கிழமை- தன்னை வேறாவது. ஒரு பொருளை எனது என்று கூறுமிடத்து அதனைத் தனக்கு வேறாகக் கருதிக் கூறுதல் ஒ. தற்கிழமை.
பின்செய்வினை- ஆகாமிய வினை.
பின்னம்- சிறியது. சிதைவு, எ-டு 1) சின்னாபின்னம் 2) பின்னமாகிப் பிரமத்தை (சிசிப 253).
பின்னமாய்- சிறியதாய். எ-டு பின்னமாய் வன்னங்கள் தோற்றம்.
பின்னுதல்- இரண்டறச் சேர்தல்.
பீ
பீசம்- விதை, விரை. வீசம் எனத்தமிழில் தற்பவமாகும்.
பீலி- மயில்தோகை. எ-டு உண்டு பாயினோடு பீலிமேல் (சிசி பபl43).
பீலியார்- சமணர்.
பு
புகழ் சீவன் முத்தர்- மிக்கதொரு பக்குவத்தில் மிகு சத்திநி பாதம் மேவியவர். ஞானம் விளைந்தவர். குருவழி நிட்டை புரிந்தவர். (சிசி சுப 281)
புகழ்சோழ நாயனார் - அரசர். உறையூர்-சோழநாடு. சிறந்த சிவ பத்தர். அதியமானுடன் போர் தொடுத்த பொழுது, அவன் படை வீரர்கள் தலைகளை இவன் வீரர்கள் வெட்டிக் கொணர்ந்து காட்டினார். அத்தலைகளில் ஒன்று சிவனடியார் தலையாய் இருக்க, அத்தலையை ஏந்தித் திருவைந்தெழுத்து ஒதித் தீக்குளித்தவர். சங்கவழிபாடு (63).
புகழ்த்துணை நாயனார் - ஆதி சைவர். செருவிலிபுத்துர்-சோழநாடு. உலகில் பஞ்சம் வந்தபொழுது சிவவழி பாட்டை முட்டின்றிச் செய்து வந்தவர். அக்காலை ஒருநாள் பசி மிகுதியால் இறைவன் முடி மீது திருமஞ்சனக் குடத்தை வீழ்த்தித் தானும் மயங்கிவிழ, இறைவனால் பஞ்சம் நீங்கும் வரை படிக்காசு கொடுக்கப்பட்டவர். இலிங்க வழிபாடு (63).
புக்கு - மறைந்து.
புகுதல்- செல்லுதல்.
புகுந்து- வணங்கித்தோன்றுதல்.
புசிப்பு - நுகர்வு.
புட்கள் - பறவைகள்
195