புட்பம்
புயல் வண்ணம்
புட்பம் - பூ.
புடை நூல் - சார்பு நூல் எ-டு சங்கற்ப நிராகரணம். பா. நூல்
புணர்தல்- தலைப்படல்.
புண்டரம் - சந்தனம், நீறு முதலியவற்றால் நெற்றி முதலியவற்றில் இடுங்குறி.
புண்டரிகம் - தாமரை, வண்டு.
புண்டரிகத்தாள்- செந்தாமரை மலர் திருவடி.
புண்டரிகன் - திருமால்.
புண்டரிகை - இலக்குமி.
புண்ணியம் - நல்வினை, அற வினை. சிவனை நோக்கிச் செய்யப்படுவது சிவபுண்ணியம் அல்லது பதி புண்ணியம். உயிர்கள் முதலியவறறை நோக்கிச் செய்யப்படுவது பசு புண்னியம். புண்ணியம், தவம் என்பவை ஒரு பொருட் சொற்கள். ஆகவே, ஞானத்தைக் கொடுக்கக்கூடிய தவங்கள் பதிபுண்ணியமாகிய சிவ புண்ணியமே. புண்ணியம் தமிழில் அறம் எனப்படும் தானம், கல்வி, தவம், ஒழுக்கம் என இது நால்வகை.
புண்ணும்- புண்ணுடம்புத் துன்பம்.
புத்தசமயத்தவர் பெயர்- சாக்கியர், தேரர், பெளத்தர், சீவகர்.
புத்த மதம் - வேதநெறி ஏற்காத சமயம். வேறுபெயர் சாக்கிய மதம். இது ஒரு வகைதேர மதம். சாக்கிய இனத்தில் தோன்றியதால், சாக்கிய மதம் எனப் பெயர் பெற்றது.
புத்தர்- 1) உயிர் குணப்பொருளே; குணம் அன்று முத்திநிலையில் உயிர்க்கு அறிவு விழைவுச் செயல்கள் தொழில் இல்லை என்று இவர் கூறுவர். 2) கெளதம புத்தர்.
புத்தர் உபதேசிகள் - மத்தியா மிகர், யோகாசாரர், வைபாடிகர், செளத்திராத்திரகர் என நால்வர். இப்பெயரால் அமைந்த மதங்களாவன; மாத்திமிகம், யோகாசாரம், வைபாடிகம், செளத்திராந்திரிகம்.
புத்தர் நால்வர் - பா. புத்த உபதேசிகள்.
புத்தன்- புத்த மதத்தைத் தோற்றுவித்த கெளதம முனி.
புத்தி, புந்தி- அறிவு. ஒரு தத்துவம் அதாவது, நுகர்வில் பட்ட பொருளை இன்னதென அறிவது. அகக் கருவி 4இல் ஒன்று. சத்துவம் மிகுந்து, இராசதம், தாமதம் குறைந்து இருக்கும். இன்பம், துன்பம், மயக்கம் இதில் தோன்றும். அவற்றை உணர்ந்து ஆன்மா நுகரும்.
புத்தி இந்திரியம், எந்திரம் - அறிவுப்பொறி 5.
புத்தி தத்துவம் - தத்துவம் 36இல் ஒன்று.
புத்திபூர்வம்- அறிந்து செய்யும் வினை. ஒ. அபுத்திபூர்வம்.
புத்திமன் - புத்தி எ-டு புத்திமன் காரியத்தால் பூதாதி புருடன் தானும் (சிசிசுப37).
புத்திர மார்க்கம் - மகன்மை நெறி. பா. மார்க்கம்.
புத்திவிருத்தி- மனத்தின் தொழில்.
புத்தேன் - புதுமை, தெய்வம்.
புத்தேளிர் - தேவர்.
புமான் - புருட தத்துவம்.
புயல்வண்ணன்- திருமால்.
196