பூவலயம்
பெரும்பெயர்
மட்டும் நுகரும்போது, மணத்தில் மலரை அனுமித்து அறிதல்
பூவலயம் - பூவுலகம்.
பூவன் - நான்முகன் எடுபடைக்கும் பூவன்.
பூழி - தூள்.
பெண் (தனி) அடியார்கள் - மூவர். காரைக்கால் அம்மையார் (திருமுறை ஆசிரியர்), மங்கையற்கரசி, இசைஞானியார். இவர்கள் நாயன்மார் வரிசையில் அடங்குவர்.
பெண்பாகன் - சிவன்.
பெணே - பெண்ணே.
பெத்தம் - பாசபந்தம், கட்டு
பெத்த காலம் - ஆன்மா பாசபந்தத்திற்கு உட்பட்ட காலம்.
பெத்த முத்தி - 1) பந்தமும் வீடும் 2) இலயமுத்தி.
பெத்தமுத்திப்பயன்கள் - பெத்தம், முத்தி ஆகிய இரண்டிலும் உயிர்கள் உணரும் பொருளை இறைவனும் உடன் நின்று உணரினும், பெத்த காலத்தில் உயிர் இறைவனை உணர்வதில்லை. எல்லாவற்றையும் அது தானே அறிவதாகவும் செய்வதாகவும் கருதுகிறது. அதனால், அப்பொழுது, இறைவன் அவ்வுயிர்களேயாய்த் தான் தோன்றாமல் நிற்கின்றான். அதனால் அப்பொழுது உண்டாகும் விளைவுகள் எல்லாம் உயிர்களுக்கே உரியன. முத்திக் காலத்தில் அதற்கு நேர் மாறாக உயிர்கள் தம்மையும் தமது அறிவு விழைவுச் செயல்களையும் சிறிது உணராமல் எவ்விடத்தும் இறைவனையே உணர்ந்து நிற்றலால், அப்பொழுது ஏற்படும் விளைவுகளில் இறைவனது எல்லையிலா இன்பத்தைத் தவிர, ஏனைய யாவும் இறைவனுடையதாகவே ஆகின்றன. ஆகவே, பெத்த நிலையில் உயிர்கள் வினைகளால் தாக்கப்படுதலும், முத்தி நிலையில் வினையில் தாக்கப்படாமலும் இருக்கும்.
பெத்தர் - பாசத்தோடு கூடிய உயிர்கள்.
பெம்மான் - கடவுள், எம்மான்.
பெயர்த்து உணர் - மாறி மாறி உணர்கின்ற.
பெரியான் - பெருமை உடையவன்.
பெருஞ்சாந்தி - கோயில் பெருவிழா முடிவில் நடக்கும் பெரிய திருமுழுக்கு.
பெருஞ்சோதி - பெம்மான்.
பெருந் தீ - வடவா முகாக் கனி என்னும் பசி,
பெரும்பதம் - பெரிய இறைப்பேறு.
பெரும்பிரான் - சிவன்
பெரும்பெயர் - மகாவாக்கியம். அஞ்செழுத்து மந்திரம் அல்லது சைவ மூலமந்திரம். இது பதி, பசு, பாசம் ஆகிய மூன்றையும் குறிப்பது. இருப்பினும் தலைமைப் பற்றிப் பதியே அதன் பொருளாகக் கொள்ளப்பட்டது. வடமொழியில் இதனை மகாவாக்கியம் என்பர். ஒவ்வொரு வேதத்தின் கருத்தையும் ஒரு சொல்லில் அடக்கிக் கூறும் மகாவாக்கியங்கள். வேதத்திலுள்ளன. அவை வேதாந்த மகாவாக்கியங்கள் சித்தாந்தத்தில் அவை சித்தாந்த