பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொறிபுலன் தோற்றம்

போக்கியம்


 உடையவை. எ-டு கண்பார்த்தல் ஒ. புலன்.

பொறிபுலன் தொழில் அட்டவணை

அறிவுப் பொறி புலன் தொழிற் பொறி புலன் இடம்

1. செவி ஓசை வாக்கு மொழி பேசுதல் வானம்

2. தோல் ஊறு பாதம் கால் நடத்தல் வளி

3. கண் பார்த்தல் பாணி கை ஏற்றல் தீ

4. நா சுவை பாயு எருவாய் மலக்கழிப்பு நீர்

5. மூக்கு முகர்தல் உபத்தம் கருவாய் இனப்பெருக்கம் மண் (நிலம்)

பொறிபுலன் தோற்றம் -அகங்காரச் சத்துவத்திலிருந்து மனமும் ஐம்பொறிகளும், அகங்கார இராசதத்திலிருந்து தொழிற் பொறிகளும், அகங்காரத் தாமதத்திலிருந்து ஐம்புலன்களும் தோன்றுவன.

பொறியிலியேன் - பொறி இல்லாதவன்.

பொன் - கதிரவன்.

பொன் எயில் - பொற்கோட்டை அருகர் வாழுமிடம் எ-டு படர்வர் பொன் எயில் எனாய் (சிசிபப162),

பொன் எயில் இடம் - பொற் கோட்டைப் பதி, எ-டு ஏர்கொள் பொன் எயிலிடத்து (சிசி பப154)

பொன் ஒளி - பகலவனும் ஒளியும் போல, இறைவன் சிவனும் சத்தியுமாக இருக்கிறான்.

பொன் தாள் - பொலிவுள்ள இறைவனடி.

பொன்பார் - பொன்னான உலகம்

பொன்வாள் - பொன்னே போன்ற கதிரவன் ஒளி,

பொன்றுகை - அழிகை

பொன்னிறம் - கதிரவன் ஒளி

போ

போகம் - 1)நுகர்ச்சி,நுகர்பொருள், பயன். இது பாவமும் புண்னியமும் ஆகும். எ-டு போக பாக்கியங்கள் (செல்வமும் நுகர்வும்). பா ஆணவம், 2) கடவுள் அவத்தை 3இல் ஞானமும் கிரியையும் சமமாக இருத்தல்

3) பெண், ஆடை அணிகலன், போசனம், தாம்பூலம், பரிமளம், பாட்டு, பூவமளி என எட்டு.

போக அவத்தை - உலகத்தைப் படைத்துக் காக்கும் சிவன் நிலை.

போக தத்துவம் - சதாசிவ தத்துவம்

போகமீன்ற புண்ணியன் - சிவன்

போக முத்தி - போக சிவத்தை அடைந்து உலகப் பற்றை விடுதல், சகல வகை ஆன்மாக்களுக்கும் போக சிவம் பதியே ஆகும். வேறுபெயர் நின்மலசுழுத்தி, சிவஞானபோதம் நூற்பா 9இல் "பதியை ஞானக் கண்ணினிற் சிந்தை நாடிப் பாசமொருவ" என்பதால் கூறப்படுதல்

போகர் - தேவர்.

போகன் - சிவமூர்த்தங்களுள் ஒன்று.

போக்கியம் - 1) நுகர் பொருள் எ-டு குலவு போக போக்கியம் 2) மனம்.

206