பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மங்கல வாழ்த்து

மண்டலர்



மங்கல வாழ்த்து - கடவுள் வணக்கம். நூல் செய்யும் ஆசிரியர் நூல் இனிது முடிய முதற்கண் கடவுளை வாழ்த்துவதும் அதன்பின் நூலைத் தொடங்குவதும் மரபு. இம் மரபுப்படி சிவஞான போதத்திற்கும் மங்கல வாழ்த்து அமைந்துள்ளது. தமிழ் நூல்களுள் முதன் முதலில் மங்கல வாழ்த்துக் கூறுவதாக அமைந்தது சிவஞான போதமே. நூலினுள் கூறப்படும் பொருள் பாகுபாடு பற்றிய குறிப்பைத் தன்னகத்தே அடக்கி நிற்றல் மங்கல வாழ்த்துக்கு இலக்கணம். இவ்விலக்கணத்தைச் சிவஞானபோதம் முழுவதும் பெற்றுள்ளது. இதில் விளக்கப்படும் அனைத்துப் பாகுபாடுகளும் குறிப்பால் உணர்த்தப்படுகின்றன.

மங்கிப் போதல் -குறைதல்.

மங்கையற்கரசியார் - அரசி, சோழ நாடு, கூன் பாண்டியன் மனைவி. தம் கண்வனை நெடு மாறனாக்கியவர். தென்னர் குலப்பழி தீர்த்த தெய்வப் பாவை. பாண்டிய நாட்டில் சமணம் நீங்கவும் சைவம் தழைக்கவும் சம்பந்தரை வரவழைத்துச் சைவம் வளர்த்த மங்கையர் திலகம்.குருவழிபாடு (63)

மஞ்சனம் - நீராட்டல்.

மஞ்சன நீர் - திருமுழுக்கு நீர் விடல். எ-டு புகை ஒளி மஞ்சனம் அமுது முதல் கொண்டு (சிசிசுப 272)

மடக்கி - திருப்பி

மடங்குதல் - முனைத்து எழாமை

மடந்தை - மகள். மூவகையினர். பூ மடந்தை - பூ மகள். புகழ் மடந்தை - இலக்குமி நாமடந்தை - சரசுவதி .

மடவாள் - மங்கை, எ-டு மடவாள் உடனே சென்று உந்தீ பெற (தி உ44)

மடவோனே - பேதாய்.

மட்டியம் - ஏழு வகைத்தாளங்களில் ஒன்று.

மட்டு -1)தேன். எ-டு மட்டு அவிழ்தோர் தேன் சிந்தும் பூமாலை 2) அளவுள்ள அலகு

மடி - சோம்பல், விழுப்பு.

மடைப்பள்ளி - கோயில் அடுக்ககளை.

மணத்தல் - சேர்தல்.

மண், மண்ணகம் - நிலம், புவி.

மண் அந்தம் - நிலம் ஈறாகிய தத்துவங்கள்.

மண்டகப்படி - சுவாமி வீதியுலா வருகையில் ஆங்காங்கு செய்யும் சிறப்பு ஆராதனை.

மண்டபம் - கொலு மண்டபம்.

மண்டபங்களின் தத்துவம் - 1) கர்ப்பக் கிரகம் - மூலாதாரம் 2) அர்த்த மண்டபம் - சுவாதிட் டானம் 3) மகாமண்டபம் மணி பூரகம், 4) நீராடு மண்டபம் - அனாதகம் 5) அலங்கார மண்டபம்- விசுத்தி 6) சபா மண்டபம் - ஆக்ஞை

மண்டலம் - 1) வாயு வருணன், சந்திரன், சூரியன், நட்சத்திரம், அக்கினி, திரிசங்கு என ஏழு. 2) 48 நாட்கள்.

மண்டல அபிடேகம் - குட முழுக்கைத் தொடர்ந்து 40-45 நாட்கள் நடைபெறும் நித்திய திருமஞ்சனம்.

மண்டலர்- அருகபரமரில் ஒருவர். புவியில் வாழும் ஆன்மாக்களைப் போன்றவர்.பா. செம்போதகர்.

209