மந்திர சுத்தி
மலபரிபாகம்
மந்திர சுத்தி -1) மூல மந்திரம், பஞ்சப்பிரம மந்திரங்கள்,சடங்கு மந்திரங்கள் ஆகியவற்றை முறையோடு உச்சரித்தல் 2) 5 சுத்திகளில் மந்திர நீரால் சுத்தமாக்கும் செயல்.
மந்திரமகேசர் - சதாசிவ மூர்த்தியால் மந்திரருக்குத் தலைவராக அமர்த்தப்பட்டுச் சுத்த தத்துவாவில் இருப்போர்.
மந்திராத்துவா - அத்துவா6இல் ஒன்று. மந்திர வடிவமானது.
மந்திராபிடேகம் - அனுட்டான வகை.
மந்திர வாதம் - மந்திரமே பரம் பொருள் என்று கொள்ளும் சமயம்,
மந்திரி - அமைச்சர்.
மதி - பிறைத்திங்கள்.
மதியாதார் - அசுரர்.
மதுகை - வலி,
மமகாரம் - எனது என்னும் செருக்கு பொருள்களை எனது எனது என்று பற்றி உரிமை கொள்வது.
மம்மர் - கல்லாமை, மயக்கம்.
மயக்கம் - தெளியாமை. பா. மருள்.
மயக்க வாசனை - திரிபு அறிவு.
மயர்வு - மயக்க வாசனை.
மயல், மயர்வு - மயக்கம், காமம், பயம்.
மயிர்க்குட்டி - கம்பளிப்புழு,
மயில் - மயிலின் அண்டம்
மயிலின் அண்டம் - மயிலின் முட்டை நீர்.
மரப்பாவை இயக்கம் - மரப் பாவையின் அசைவு, அதை இயக்குபவர்.
மரப்புல்லூரி- புல்லுருவி.
மரபு - வழி.எ-டு முனிமரபு.
மரிதொண்டதார்யர் - கி.பி. 14. சித்தாந்தசிகாமணி உரையாசிரியர்.
மரிப்பார் - நினைப்பார்.
மரீஇ - கலந்து உறவு கொள்க. எடுஅன்பரோடு மரீஇ (சிபோ நூ. பா 12).
மரு இயல் - குற்றம் பா. உருஇயல், அருஇயல், இருஇயல்.
மருத்து - காற்று.
மருவார் - குற்றமில்லாதவர்.எ-டு மருவார் மறைக் காட்டில் வாசல் திறப்பித்தல்.
மருள் - 1) மயக்கம் 2) குறிஞ்சி யாழ்த்திறம்.
மருள் கொண்ட மாலையாய் - மருளாகிய பண்ணை வண்டுகள் அமர்ந்து பாடப்பட்ட மாலையினை உடையான்.
மருவு - தலைப்படு.
மருவுவன் - தலைப்படுவன.
மருள்சித்தர் - பழைய வீரசைவ ஆசாரியார்.
மலக்கதிர் - மும்மலத்தார்.
மலகன்மம் - பாமலம்.
மலக்கயம் - மலவினை.
மலத்திரயம் -மும்மலம்
மலபரிபாகம் - மலமுதிர்வு. இதற்குக் காரணம் வினை ஒப்பு. ஆணவ மல காரியமான மோகம் முதலாகக் கூறப்பட்ட தீய குணங்கள் ஆன்ம அறிவை விட்டு நீங்குதல். ஆணவமலம் முதிர்ந்து நீங்குவதற்கு ஏதுவாதல். இதனைத் தொடர்வது சத்திநிபாதம். வினை ஒப்பு, மலபரிபாகம், சித்திநிபாதம் ஆகிய மூன்றும் தொடர்நிகழ்ச்சி