மலர்
மறைக்காடு
களான முந்நிகழ்ச்சிகள், பா. வினை ஒப்பு, சத்திநிபாதம்.
மலர் - பூ விரிந்த மலமுடையவர் திருவடித் தாமரை.
மலர்தலை- விரிந்த இடம். எ-டு மலர்தலை உலகின் மாயிருள் துமியப்(சிபோ சிறப்புப் பாயிரம்)
மலம் - பொருள். அழுக்கு, இருள், குற்றம், தீவினை. வகை. மும்மலம், ஆணவம், கன்மம், மாயை. பொதுவாக இச்சொல்மலத்தையேகுறிக்கும். இயல்புகள், 1) பாசக்கூறு 2) அறிவை மறைத்து குற்றத்திற்கு உள்ளாக்குவது. 3) நிகழ்ந்ததை மறக்கச் செய்வது 4) நிகழப் போவதை அறியவிடாமல் தடுப்பது.
மல மாயை - பா. மலம்,
மல வாசனை - மலப் பயிற்சி.
மலிந்தவர் - மிக்கவர்.
மலைபடுபொருள் - அகில், குங்குமம், கோட்டம், தக்கோலம், மிளகு மலைமாது, மகள் - உமை, மலையற்க மயங்கற்க,
மலைவில்லார் -1) மலைவு இல்லார். மலைப்பு அல்லது ஐயப்பாடு இல்லாதவர்.2) மலை வில்லார், மேருமலையை வில்லாகக்கொண்ட சிவபெருமான்.
மலைவு, மலைதல் - ஒன்றின் ஒன்று மாறுபடுகின்ற சமய நூல்களைப் பயிலுங்கால் தோன்றும் ஐயமும் திரிபும். ஞானாசிரியருயை அறிவுரையின்றி மலைவு தீர்வதற்கு வழி இல்லை. ஆகவே, சிவபெருமானே கல்லால் மரத்தின் கீழ் இருந்து ஆசிரியர் கோலத்தில் சனாகாதி முனிவர் நால்வருக்கும் ஞான விளக்கம் நல்கினார் என்பது வரலாறு.
மழவு - குழவு.
மழுவாளி-மழுவைக் கொண்ட சிவன்.
மறப்பித்தல்-இழக்குமாறு செய்தல்.
மறப்பு - விடுவது.
மறம்- வீரம் தீவினை. எ-டு மறம் அற்றவர். தமிழ் மறம் உடையார் மறவாமை இடை ஈடில்லாமை.
மற்ற வீடு- உருவம் ஆதி ஐந்தையும் மாய்ப்பது.
மற்று -அதனின்று வேறு.
மறிகடல் - திரைகடல்.
மறித்தல் -தடுத்தல்.
மறுதலை - எதிர்மறை எ-டு அதர்மம் X தர்மம் உயிர் x இறைவன். முற்றிலும் மாறுபாடு உடையது அன்று.
மறுப்பு உத்திகள்-வாதம்,செற்பை, விதண்டை ஏது ஆகிய நான்கு மறுப்பு நுட்பம் ஒருவர் கொள்கையை மறுக்கும்பொழுது, அவர்கள் ஏற்றுக் கொள்கின்ற கொள்கையை வைத்தே மறுக்கும் பாங்கு தெரிந்ததிலிருந்து தெரியாததற்குச் செல்லுதல் என்னும் உளவியல் நெறிமுறையில் அமைந்தது. இந்நெறிமுறை கொண்ட சிறந்த சற்காரிய வாதத்தினால் சைவத்திற்கு மாறான சமயக் கொள்கைளை எல்லாம் மெய்கண்டார் மறுப்பது வியப்பிற்குரியது.
மறுமை -சுவர்க்கம். ஒ. இம்மை.
மறை - வேதம். எ-டு நான்மறை.
மறைக்காடு - திருமறைக்காடு (வேதாரண்யம்) எ-டு நல்ல மருவார் மறைக்காடு (திப 71)