பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மறைஞான சம்பந்தர்

மன்னி


 மறைஞான சம்பந்தர் - அந்தணர். திருப்பெண்ணாகடம். மெய் கண்டார் மாணாக்கர். இவர் மாணவர் உமாபதி சிவாசாரியார். நூல் ஒன்றும் எழுதவில்லை. நான்கு புறச் சந்தானக் குரவரில் ஒருவர். கி.பி. 13. சிவதிருமோத்திரத்தை வடமொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்துப் பாடியவர்.

மறைஞானதேசிகர் - தத்துவநெறி கற்றவர். தொல்காப்பியச் சைவ சித்தாந்தக் கருத்தை விளக்கியவர். சிவஞானசித்தியாருக்கு உரை கண்டவர்.இவர் சிதம்பரம் கண்கட்டி மறை ஞான பண்டாரத்தின் மாணவர். சீகாழிப் பதியினர். இருமொழி வல்லவர்.

மறைப்பு உண்ணுதல்- மறைக்கப்படுதல்.

மறைமொழி - மந்திரம் நிறை மொழி மாந்தர், தம் ஆணையால் சொல்லிய மறைந்தமொழிதான் மந்திரமாகும். நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப (தொல் 1427).

மறைமுடிவு-வேதாந்தம், கடவுள்.

மறைமுதல் - 1) சிவன் 2) பிரணவம்.

மறைமுதலி - சிவன்.

மறையோன் - மறை விற்பன்னர்.

மறையோன் புலைச்சி - மறையவன் புலைச்சியை மருவுவார் என்பது முறையன்று. அது புனைமொழி.

மனக்கு - மனம்.

மனம் - உள்ளம். பசுஞானம். அகங்காரச் சத்துவக் குணக் கூறில் முன்னதாகத் தோன்றுவது. இது தைசத்தில் வந்து ஒரு பொருளை முந்தி நினைத்து, அங்கு ஐய நிலையில் நிற்கும். இது ஒரு தத்துவம்

மனஎழுச்சி -உள்ளக் கிளர்ச்சி.

மனமாதி - மனம் முதலிய அந்தக்கரணங்கள்.

மனவாசகங்கடந்தார் - மெய் கண்டார் மாணாக்கர்களில் ஒருவர். திருவதிகையில் பிறந்தவர். உண்மை விளக்கம் என்னும் நூலின் ஆசிரியர். இது சைவ சித்தாந்த பால பாடம். செய்யுள் நடையில் அமைந்தது 54. வெண்பாக்கள்.

மன்உலகு இசைக்கும் - மெய்யறிவாளர் கூறுவார்.

மன்ற - உறுதியாக, எ-டு மன்ற மதிக் கலை போலக் (சிசிபப10)

மன்ற பாண்டியன் -கூன் பாண் டியன். பா. மங்கையற்கரசி.

மன்று - திருச்சிற்றம்பலம்.

மன்ன- பெரும.

மன்னர்க்கு மன்னராய் - தைத்திரியரை அழித்துப் பரசுராமனாதல் இராமனாய் இராவணனைக் கொல்லுதல். பலராமனாய் உலகைக் காக்க யோகத்தில் நின்றது. வாசுதேவராய் அசுரரை அழித்தது. இவை எல்லாம் மாமன்னருக்குரிய செயல்கள்.

மன்னன் அருள் - அரசன் கருணை. மன்னன் வழி எவ்வழி, அவ்வழி அரன் அருள்.

மன்னா - பொருந்தா, மன்னவனே.

மன்னி - நிலைபெற்று. எ-டு ஒன்றுஅறிந்து ஒன்று அறியாதாகி உடல் மன்னி (சிபோ பா 18).

213