மாத்திரை, தன்
மாயேயம்
மாத்திரை தன் - ஐம்புலன்கள். எ-டு பேசும்மாத்திரைகள் ஐந்தும் (சிசிசு 154)
மாத்தியாமிகன் - மாத்துவர். உயிரும் இறைவனும் வேறு என்னுங் கொள்கையர்.
மாத்துவர் - பா.மாத்தியாமிகன்.
மாந்திரிகன் - மந்திரவாதி.
மாந்திரவினை - வினை 5இல் ஒன்று. மந்திரம் செபித்தலும் ஞானநூல் ஓதுதலும் சாந்திய தீத கலையில் அடங்கும். சுத்த போகங்களைத் தரும்.
மாது - பெண்.
மாதுங்க பாரதம் - மிக்கபெருமையுள்ள மகாபாரதம். வியாசர் அருளியது. ஐந்தாம் வேதம் எனப்படுவது.
மாதுபாகன் - பெண்பாகன், சிவன்,
மாநாகம் - மாணிக்க மணியுள்ள பெரிய நல்ல பாம்பு.
மாமணி - மாணிக்கம்.
மாமாயை - 1) சுத்த மாயை 2) பார்வதி
மாயம் - பொய், வியப்பு.
மாயக்கருவாதை - மாயப் பிறப்பு.
மாயக்கள் - அறிவை மயக்கும் பொருள். ஒ. மாய ஞானக்கள்
மாயமான் - பொய்மான்.
மாயவன் - இறைவன், திருமால்.
மாயிருள் - மாயை.
மாயா இலக்கணம் - மாயையின் இயல்பு 5. அசத்து, சடம், அநித்தம், துக்கம், கண்டம் பா.மாயை.
மாயா இயந்திரதனு - மாயையின் காரியமாகிய உடம்பு, எ-டு மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா (சிபோநூபா 3).
மாயா காரியம் - மாயையின் தோற்றமாகிய பிரபஞ்சம் முதலியன.
மாயா சத்தி - மாயை ஆகிய ஆற்றல்.
மாயாசுத்தி - செயல்10இல் ஒன்று.
மாயா தரிசனம் - செயல் 10 இல் ஒன்று. உலகின் பெயர் வடிவங்களை மாயை என அறிதல்,
மாயாதருமம் - சங்கோசவிகாசங்களாகிய மாயையின் தன்மை,
மாயா பஞ்சகம் - மாயை ஐந்து. தமம், மாயை, மோகம், அவித்தை, அநிருதம்
மாயா மலம் - மும்மலத்தில் ஒன்றான மாயை ஆகிய மலம்.
மாயாவல்லமை - உலகப் படைப்பில் காணும் மாயையின் ஆற்றல்
மாயா வாதம் - இது ஏகான்ம வாதத்தில் ஒரு வகை. உலகம் யாவும் மாயையே என்று பெளத்தம்முதலிய அத்துவைத மதங்களில் கூறப்படும் கொள்கை. இக்கொள்கை உடையவர் மாயாவாதிகள். மாயை உண்டு என்றோ இல்லை என்றோ கூற இயலாது என்பர் இவர்கள். 'நான் பரபிரமமே வேறல்லன்' என்று உணர்ந்து அவ்வுணர்வில் நிலைபெற்று விடுவதே வீடுபேறு என்று இவர்கள் வற்புறுத்துவர். பா. மாயை. ஏகான்ம வாதம்.
மாயா விகற்ப ஞானம் - ஒரே பொருள் வெவ்வேறு பொருள்களாகக் காண வரும் அறிவு.
மாயாள் - மாயை.
மாயேயம் - 1) மலம் 5இல் ஒன்று. 2) அசுத்த மாயையின் காரியம்; காலம், நியதி, கலை, வித்தை,