மாயை
மார்க்கர்
இராகம், புருடன், மாயை எனனும் 7 தத்துவங்கள்.
மாயை - பொருள்: மும்மலங்களுள் இறுதியானது. ஒடுங்கி உண்டாவது. இயல்புகள்: 1) உயிர் ஆகாது 2) மலத்தைப் பற்றும் 3) முதற் காரணம் 4) அசத்து 5) சடம் 6) அநித்தம் 7)துக்கம் 8) கண்டம்.
வகை: 1) சுத்த மாயை 2) அசுத்த மாயை 3) பிரகிருதி மாயை. வரையறுத்துக் கூற, அசுத்த மாயை, சுத்த மாயை என இரண்டே.
1)மாயை உள்ளதும் அன்று; இல்லதும் அன்று இன்னது என்று சொல்ல முடியாத அநிர்வசனப் பொருள் அது “ என்பர் மாயாவாதிகள். “வித்து உள் பொருளாய் நிலத்தில் இருந்து உலகத்தைத் தோற்றுவிக்கிறது" என மறுத்து, “மாயை உள் பொருளே’ என மெய்கண்டார் கூறுவார்.
2) மாயை இறைவனின் வேறான ஒரு பொருளன்று. இறைவனேதான் மாயையாயும் இருக்கின்றான் என்பர் சிவாத்துவித சைவரும் பாஞ்சராத்திரிகளும். “மாயை வித்துபோல்வது; இறைவன் நிலம் போல்வன்" எனக்கூறி, ‘மாயையும் இறைவனும் வேறு வேறு பொருள்களே' என அவ்விரு மதத்தாரும் மறுக்கப்படுகின்றனர். `
3) "உலகத்தைத் தோற்றுவிப்பது மாயை அன்று; இறைவனே உலகமாகப் பரிணமிக்கிறான்” என்பர் பரிணாம வாதிகள். இவர்கள் மாயாவாதிகளை ஒப்பர். ஏகான்ம வாதம் கூறுபவர்."நிலத்தின்கண் வித்துள்ள போதே முளை தோன்றுதலும் நிலத்துக் கண்வித்து இல்லாத பொழுது முளை தோன்றாமையும் போல, இறைவனிடத்து மாயை இருப்பது ஆகவே, உலகம் தோன்றிற்று. அஃது இல்லையாயின் தோன்றாது.” எனச் சற்காரிய வாதங்கூறி, அவர்கள் கூற்று மறுக்கப்படுகின்றது.
சுத்த மாயையும் அசுத்த மாயையும் ஒன்றிலிருந்து தோன்றாத காரணம் பொருள்கள். பிரகிருதிமாயை மட்டும் அசுத்த மாயையிலிருந்து தோன்றிய காரியப் பொருள். உலகைத் தோற்றுவிப்பது மாயை. இதிலிருந்து காலம், நியதி, கலை ஆகியவை தோன்றும் கலையிலிருந்து வித்தையும் வித்தையிலிருந்து அராகமும் தோன்றும்.
மாயையை அகற்றுதல் - பெயர் வடிவத்தின் அதிட்டானம் எனச் சச்சிதானந்தத்தை காணும் நிலை.
மார்க்கம் - நெறி.நால்வர் ஒழுகிய நால்வகைச் சமய நெறி. அவை யாவன: 1) சகமார்க்கம் - தோழமை நெறி 2) சற்புத்திரமார்க்கம் - மகன்மை நெறி 3) தாசமார்க்கம் - அடிமை அல்லது தொண்டுநெறி 4) சன்மார்க்கம் - ஞான நெறி அல்லது நன்னெறி பா. நான்கு பாத அட்டவணை.
மார்க்கர் - மார்க்கமுடைய ஞானிகள். எ-டு அப்பர், திருஞானசம்பந்தர்.